ஆப்நகரம்

அழிவின் விளிம்பில் இந்திய அருங்காட்சியகங்கள்.!

இந்தியா முழுவதிலும் உள்ள அருங்காட்சியகங்கள் இடிந்து தரைமட்டமாகக் கூடிய அபாய நிலை உருவாகி உள்ளதாக தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் எச்சரித்துள்ளது.

TNN 22 Oct 2017, 12:01 pm
இந்தியா முழுவதிலும் உள்ள அருங்காட்சியகங்கள் இடிந்து தரைமட்டமாகக் கூடிய அபாய நிலை உருவாகி உள்ளதாக தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் எச்சரித்துள்ளது.
Samayam Tamil indian museums are in risk condition
அழிவின் விளிம்பில் இந்திய அருங்காட்சியகங்கள்.!


ஆய்வு;
தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம், இந்தியாவில் உள்ள முக்கிய அருங்காட்சியகங்களுக்கு நேரடியாக சென்று ஆய்வு செய்தது. அதில் நாடு முழுவதிலும் உள்ள அருங்காட்சியகங்கள் இடிந்து தரைமட்டமாகக் கூடிய அபாய நிலை உருவாகி உள்ளதாக, தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் நடத்திய ஆய்வின் முடிவில் தெரிய வந்துள்ளது. இதனால் அருங்காட்சியகங்களில் உள்ள அரிய, புராதான பொருட்கள், ஓவியங்கள் அழியும் நிலை உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெரும்சேதம்;
கடந்த ஆண்டு டில்லி தேசிய அருங்காட்சியக கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில், அங்குள்ள நூலத்தின் பெரும் பகுதி சேதமடைந்தது. 2014 ல் ஸ்ரீநகரில் ஏற்பட்ட வெள்ளத்தில் பிரதாப் சிங் அருங்காட்சியகத்தில் இருந்த அரிய பொருட்கள் சேதமடைந்தன.

எச்சரிக்கை;
இதே போன்று புதுடெல்லி, பெங்களூரு, மும்பை, கோல்கட்டா, அலகாபாத் உள்ளிட்ட நகரங்களில் உள்ள அருங்காட்சியகங்களில் வைக்கப்பட்டுள்ள பொருட்களும் பாதிப்பிற்கு உள்ளாக கூடிய நிலையில் உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. இயற்கை சீற்றங்கள் காரணமாகவோ, மனிதனால் உருவாக்கப்படும் பேரழிவுகள் காரணமாகவோ இந்த சேதங்கள் நடக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
பீகார், குஜராத், இமாச்சல பிரதேசம், காஜ்மீர், உத்தரகாண்ட் மற்றும் வட கிழக்கு மாநிலங்கள் அதிக அளவில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. இதற்க அடுத்தபடியாக ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள 40 அருங்காட்சியகங்கள் நிலநடுக்கம், சுனாமி, புயல் சின்னம் ஆகியவற்றாலும், ஒடிசாவில் உள்ள 30 அருங்காட்சியங்கள் சுனாமி மற்றும் புயலால் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

பாதுகப்பு வளையம்;
அருங்காட்சியகத்திற்கு 100 கி.மீ., தூரத்திற்குள் 6 ரிக்டர் அளவிற்குள் நிலநடுக்கம் ஏற்பட்டால் அவை இடிந்து, தரைமட்டமாகும். இதனால் அருங்காட்சியகத்தின் அனைத்து பகுதிகளிலும் பாதுகாப்பு வளையத்தை உருவாக்குவது அவசியம் எனவும் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.

Indian museums are in risk condition

அடுத்த செய்தி