ஆப்நகரம்

ஏப்ரல் 15க்கு பிறகு ரயில், விமானப் பயணமா; ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்யலாமா?

நாடு முழுவதும் கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்தும் வகையில் பிறப்பிக்கப்பட்டு உள்ள 21 நாட்கள் லாக் டவுன் உத்தரவை அடுத்து வரும் நாட்களுக்கு டிக்கெட் முன்பதிவு செய்யலாமா என்று கேள்வி எழுந்துள்ளது.

Samayam Tamil 9 Apr 2020, 7:39 pm
கோவிட்-19 எனப்படும் கொரோனா வைரஸ் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் 21 நாட்கள் ஊரடங்கு வரும் ஏப்ரல் 14ஆம் தேதி வரை அமலில் இருக்கிறது. இந்தக் காலக்கட்டத்தில் அனைத்து பொதுப் போக்குவரத்தும் முடக்கப்பட்டுள்ளன. சரக்கு ரயில்கள் மட்டும் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் ஏப்ரல் 15ஆம் தேதியுடன் ஊரடங்கு முடிவுக்கு வந்து விடுமா?
Samayam Tamil டிக்கெட் முன்பதிவு


அதன்பிறகு ரயில் மற்றும் விமானங்களில் பயணம் செய்யலாமா என்று பொதுமக்கள் மற்றும் ஊழியர்களிடையே கேள்வி எழுந்தது. ஊரடங்கு மேலும் நீட்டிக்கும் திட்டம் இல்லை என்று மத்திய அரசு தரப்பில் சமீபத்தில் தெரிவிக்கப்பட்டது.

எனவே ஊரடங்கை காலத்தை தவிர்த்து வரும் 15ஆம் தேதி முதல் வழக்கமாக ஆன்லைனில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுபற்றி ரயில்வே நிர்வாகம் தரப்பு கூறுகையில், ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள காலக்கட்டத்தில் அனைத்து ரயில் சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த ரயில் பயணத்திற்காக முன்பதிவு செய்திருந்த நபர்களுக்கு அதற்கான கட்டணம் திருப்பி வழங்கப்பட்டு வருகிறது.

கொரோனாவிற்கு இந்தியாவில் பலியான முதல் மருத்துவர்!

வரும் 15ஆம் தேதியில் இருந்து டிக்கெட் முன்பதிவு தொடங்கப்படுவதாக சில மீடியாக்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அது தவறு. ஊரடங்கு காலத்தை தவிர மற்ற நாட்களுக்கு டிக்கெட் முன்பதிவு நிறுத்தப்படவே இல்லை.

எனவே வரும் 15ஆம் தேதி மற்றும் அதற்கு பிறகான டிக்கெட் முன்பதிவு ஊரடங்கு காலத்திற்கு முன்னதாகவே திறந்துவிடப்பட்டிருந்தன. இந்த முடிவை தற்போது எடுக்கவில்லை என்று தெளிவுபடுத்தி உள்ளது.

இதேபோல் விமான பயணங்களுக்கான முன்பதிவும் ஊரடங்கு காலத்தை தவிர்த்து மற்ற நாட்களில் திறந்தே இருக்கும் என்று கூறப்படுகிறது.

அடுத்த செய்தி