ஆப்நகரம்

ரயிலில் ஜன்னலோர சீட் விரும்பிகளுக்கு ஹேப்பி நியூஸ்!

ரயில் பயணத்தின் ஜன்னலோர சீட் விரும்பிகளுக்காக சீட் அமைப்பில் அதிரடி மாற்றத்தை இந்திய ரயில்வே கொண்டு வந்துள்ளது

Samayam Tamil 18 Dec 2020, 3:52 pm
ரயில் பயணம் என்றாலே ரம்மியமானதுதான். அதிலும் ஜன்னலோரத்தில் பயணம் என்றால் சொல்லவே வேண்டாம். பொதுமக்களை பொறுத்தவரை நீண்ட தூர பயணங்களுக்கு பிற போக்குவரத்தை விட ரயிலையே தேர்வு செய்கின்றனர். பயணக் கட்டணம் குறைவு, வசதியாக படுத்துக் கொண்டு செல்வது, கழிப்பறை வசதி உள்ளிட்டவைகள் அதற்கு காரணமாக உள்ளது.
Samayam Tamil கோப்புப்படம்
கோப்புப்படம்


ரயில் கம்பார்ட்மெண்டில் ஏராளமான சீட்டுகள் இருந்தாலும், கீழ் படுக்கை வசதி கொண்ட இருக்கையையே பெரும்பாலான பயணிகள் புக் செய்வது வழக்கம். ஆனால், அனைவருக்கும் அந்த சீட் கிடைப்பதில்லை. வயது முதிர்ந்த மூத்த குடிமகன்களுக்கு மட்டுமே கீழ் படுக்கை வசதி கொண்ட இருக்க ஒதுக்கப்படுகிறது.

அதேசமயம், ரயில் பெட்டியின் பக்கவாட்டில் உள்ள கீழ் படுக்கை வசதி கொண்ட இருக்கையை பெரும்பாலானவர்கள் விரும்புவதில்லை. இரண்டு சீட்டுகளை சேர்த்து போட்டு படுக்கையாக மாற்றும் போது, நடுவில் இருக்கும் சிறிய இடைவெளியால் உடல் சமநிலை இல்லாமல் சரியாக தூக்கம் வராது. பிடிமானம் உள்ளிட்டவைகளும் இல்லாமல் அதன் அமைப்பே வேறு மாதிரியாக இருப்பதால் பயணிகள் பக்கவாட்டில் உள்ள கீழ் படுக்கை இருக்கையை விரும்புவதில்லை.

தரிசனம் கிடையாது; திருப்பதி பக்தர்களுக்கு அதிர்ச்சி செய்தி!

இந்த நிலையில், இந்த இருக்கை அமைப்பில் இந்திய ரயில்வே மாற்றத்தை கொண்டு வந்துள்ளது. அதன்படி, ரயில் பெட்டியின் பக்கவாட்டில் இருக்கும் இரு இருக்கைகளையும் இணைந்து போட்டு அதன் மேல் ஒரு படுக்கையை போடும் வசதியை இந்திய ரயில்வே ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான விளக்க வீடியோவை ரயில்வேத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.


இதன் மூலம், பக்கவாட்டில் இருக்கும் கீழ் படுக்கை வசதி கொண்ட இருக்கையை புக் செய்யும் பயணிகளும் மற்ற பயணிகளை போல் நிம்மதியாக உறங்கிக் கொண்டு செல்லலாம் என்பதால் ரயில் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

அடுத்த செய்தி