ஆப்நகரம்

ரயில் பயணத்திற்கு ரெடியா? - ஹேப்பி நியூஸோடு காத்திருக்கும் இந்திய ரயில்வே!

நாடு முழுவதும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வரும் சூழலில் ரயில் பயணம் குறித்து முக்கிய அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Samayam Tamil 1 Sep 2020, 1:02 pm
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு புதிய உச்சங்களைத் தொட்டு கொண்டிருக்கிறது. இருப்பினும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகிறது. பேருந்து போக்குவரத்தைப் பொறுத்தவரை சம்பந்தப்பட்ட மாநிலங்கள் முடிவெடுத்துக் கொள்ளலாம் என்று மத்திய அரசு தெரிவித்தது. ஆனால் ரயில் போக்குவரத்து மத்திய அரசின் கையில் இருக்கிறது. மாநில அரசுகள் கேட்டுக் கொண்டால் அதற்கேற்ப ரயில் போக்குவரத்து அமலுக்குக் கொண்டு வரப்படும் என்று தெரிவித்திருந்தது. அதன்படி தற்போது 30 ராஜ்தானி ரயில்கள் உட்பட 230 விரைவு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
Samayam Tamil Train Services


இவற்றின் நேரத்தில் எந்தவித மாற்றமும் இன்றி தொடர்ந்து இயக்கப்படும் என்று கூறப்படுகிறது. கொரோனா நிலைமைக்கு ஏற்ப படிப்படியாக கூடுதல் ரயில்கள் இயக்கப்படுவது பற்றி முடிவெடுக்கப்படும் என்று ரயில்வேத்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது.

ஆனால் அதற்கான சரியான சூழல் ஏற்படவில்லை. தற்போது நாடு முழுவதும் UNLOCK 4 வழிகாட்டுதல்கள் நடைமுறைக்கு வந்துள்ளன. இன்று முதல் வரும் 30ஆம் தேதி வரை கட்டுப்பாடுகளுடன் கூடிய தளர்வுகள் அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாடுகளுக்கு போக முடியாது - வந்தாச்சு புதிய உத்தரவு!

இதில் மெட்ரோ ரயில் சேவைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 100 பயணிகள் ரயில்களை இயக்க இந்திய ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இவை மாநிலங்களுக்கு இடையிலும், மாநிலத்திற்கு உள்ளேயும் இயக்கப்பட உள்ளன.

இதற்காக மத்திய உள்துறை அமைச்சகத்தின் அனுமதியை நாடியுள்ளது. உரிய அனுமதி கிடைத்தவுடன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவை சிறப்பு ரயில்கள் என்ற பெயரில் இயக்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி