ஆப்நகரம்

1,160 கி.மீ தூரம் காட்டில் பயணித்து இந்திய புலிகள் கின்னஸ் சாதனை..!

மகாராஷ்டிரா மற்றும் தெலங்கானா சரணாலயங்களில் வசித்து வரும் இரு புலிகள் நீண்ட தூரம் பயணித்து கின்னஸ் சாதனை படைத்துள்ளன.

Samayam Tamil 12 Nov 2019, 6:36 pm
நடை பயிற்சி மனிதர்களுக்கு மட்டுமில்லாமல் விலங்குகளுக்கும் முக்கியம் என்பதை இந்த இரண்டு புலிகள் உணர்த்தியுள்ளன. அதோடு தனி காட்டு ராஜாவாக மழை, வெயில் என கடுமையான சூழலில் நீண்ட தூரம் பயணித்து கின்னஸ் சாதனையையும் படைத்துள்ளன.
Samayam Tamil 1,160 கி.மீ தூரம் காட்டில் பயணித்து இந்திய புலிகள் கின்னஸ் சாதனை..!


விலங்குகள் சரணாலயங்களில் உள்ள சிங்கம், புலி போன்ற எண்ணிக்கை குறைந்து வரும் உயிரினத்திற்கு மேற்கொள்ளப்படும் பராமரிப்பு நடவடிக்கைகள் மிக துரிதமாக இருக்கும். குறிப்பாக சிங்கம், புலிகளுக்களின் கழுத்தில் ஜி.பி.எஸ் உள்ளிட்ட டிராக் தொழில்நுட்பம் கொண்ட ரேடியோ பெல்ட் பயன்படுத்தப்படும்.

அதன் முறையே மகாராஷ்டிரா மாநிலம் தீபேஸ்வர் வனவிலங்கு சரணாலயத்தில் உள்ள சி1 என்ற ஆண் புலிக்கு ரேடியோ பெல்ட் அணிவித்து கண்காணிப்பில் இருந்துள்ளனர். இந்த புலி கடந்த பிப்ரவரி 27 ஆம் தேதி சரணாலயத்தை விட்டு நகர்ந்து தெலங்கானா, மகாராஷ்டிரா ஆகிய இரு மாநிலங்களை ஒட்டியுள்ள காட்டில் பயணித்துள்ளது.

மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்: ராம்நாத் கோவிந்த் ஒப்புதல்

இந்த நாட்களில் புலியின் நடவடிக்கை, உணவு, உடல் நலம், தொலைவு என அனைத்தையும் கழுத்தில் உள்ள ரேடியோ பெல்ட் மூலமாக கண்காணித்துள்ளனர். மேலும் சி1 புலி மற்ற புலிகளை காட்டிலும் உள்திறன் கொண்டதென வனத்துறையினர் கூறுகின்றனர்.

ஆனால் இதுவரை எந்த புலியும் உடைக்காத சாதனையாக 9 மாதங்களில் 6 மாவட்டங்களை கடந்து 1,160 கி.மீ தூரம் பயணித்தது மிக பெரிய இலக்கு என கூறுகின்றனர். இந்த சாதனையை நவம்பர் 10 ஆம் தேதி பதிவு செய்தனர்.

மத்திய அரசின் கைப்பாவையா ஆளுநர்? மகாராஷ்டிராவில் ஏன் இவ்வளவு அவசரம்!

அதே சமயம் தெலங்கானா மாநிலம் ஃபல்குனா விலங்குகள் சரணாலயத்தில் கே7 என்ற ஆண் புலி நேற்று (செப்டம்பர் 11) தெலங்கானா எல்லையிலேயே 450 கி.மீ தூரம் பயணித்துள்ளதாக சாதனை பதிவாகியுள்ளது.

அடுத்த செய்தி