ஆப்நகரம்

முதியவரைக் கொன்ற புலியைப் பழி தீர்த்த உறவினர்கள்

புலியைக் கண்டதும் கையில் கிடைத்த கற்களாலும் கம்புகளாலும் புலியைத் தாக்கியுள்ளனர். பின் வேகமாக டிராக்டரை ஓட்டிச்சென்று அதன் மேல் மோதி பழி தீர்த்தனர்.

Samayam Tamil 5 Nov 2018, 6:35 pm
உத்தரப் பிரதேசத்தில் முதியவரைக் கொன்ற புலியை கிராமத்தினர் டிராக்டர் ஏற்றி கொன்றுள்ளனர்.
Samayam Tamil 6785342-cute-tiger-wallpaper


மகாராஷ்டிரா மாநிலத்தின் யவாடாமால் மாவட்டத்தில் அவ்னி என்ற்ற புலி ஆள் உண்ணும் புலியை அண்மையில் வனத்துறையினர் சுட்டுக்கொன்றனர். அந்தப் பெண் புலி 14 பேரைக் கொன்றது குறிப்பிடத்தக்கது.

உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் இருந்து 210 கி.மீ. தொலைவில் தூத்வா புலிகள் காப்பகம் உள்ளது. இங்கிருந்து ஒரு பெண் புலி அருகில் இருந்த கிராமத்திற்குள் நுழைந்திருக்கிறது.

குடியிருப்புப் பகுதியில் உலாவந்த அது 50 வயதான முதியவரை கொன்றுபோட்டது. இதனால் முதியவரின் உறவினர்களும் கிராமத்தினரும் இணைந்து காட்டுக்குள் அந்தப் புலியைத் தேடி டிராக்டரில் சென்றனர்.

வனத்துறை காவலர்களை அடித்துவிட்டு அத்துமீறி வனப்பகுதியில் சென்ற அவர்கள், அந்தப் புலியைக் கண்டதும் கையில் கிடைத்த கற்களாலும் கம்புகளாலும் புலியைத் தாக்கியுள்ளனர். பின் வேகமாக டிராக்டரை ஓட்டிச்சென்று அதன் மேல் மோதி பழி தீர்த்தனர்.

புலியைக் கொன்றதற்காக அவர்கள் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இது குறித்து கிராம மக்களிடம் கேட்டபோது, “காட்டிலிருந்து ஊருக்குள் புகும் விலங்குகளால் அடிக்கடி தொல்லை ஏற்படுவது பற்றி வனத்துறையினம் பலமுறை புகார் கொடுத்தோம். எந்த பாதுகாப்பு நடவடிக்கையும் எடுக்காததால் நாங்களே அவற்றை எதிர்த்து தாக்குகிறோம்” எனக் கூறுகின்றனர்.

அடுத்த செய்தி