ஆப்நகரம்

நாட்டின் முதல் புல்லட் ரயில்; பிரதமர் மோடி, ஷின்ஷோ அபே இன்று அடிக்கல்!

நாட்டின் முதல் புல்லட் ரயில் திட்டத்திற்கு இன்று அடிக்கல் நாட்டப்படுகிறது.

TNN 14 Sep 2017, 8:46 am
ஆமதாபாத்: நாட்டின் முதல் புல்லட் ரயில் திட்டத்திற்கு இன்று அடிக்கல் நாட்டப்படுகிறது.
Samayam Tamil indias first bullet train inauguration today
நாட்டின் முதல் புல்லட் ரயில்; பிரதமர் மோடி, ஷின்ஷோ அபே இன்று அடிக்கல்!


இந்தியாவின் முதல் புல்லட் ரயில் ஆமதாபாத் - மும்பை இடையே இயக்கப்பட உள்ளது. இதற்கான திட்டம் ஜப்பானுடன் இணைந்து செயல்படுத்தப்படுகிறது.

இந்நிலையில் ஜப்பான் பிரதமர் ஷின்ஷோ அபே, நேற்று விமானம் மூலம் ஆமதாபாத் வந்தடைந்தார். அவரை ஆரத் தழுவி பிரதமர் மோடி சிறப்பான வரவேற்பு அளித்தார்.

இதையடுத்து இருவரும் திறந்த வாகனத்தில் பொதுமக்களை வணக்கம் தெரிவித்துக் கொண்டே புறப்பட்டுச் சென்றனர். பின்னர் சபர்மதி ஆசிரமத்தை பார்வையிட்டனர்.

இந்த சூழலில் இந்திய-ஜப்பான் இடையேயான 12வது உச்சி மாநாடு காந்தி நகரில் இன்று நடைபெறுகிறது. அதில் இருதரப்பு உறவை மேம்படுத்துவது குறித்து பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

இதனைத் தொடர்ந்து ஆமதாபாத்தில் புல்லட் ரயிலுக்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடக்கிறது. இதனை பிரதமர் மோடியும், ஷின்ஷோ அபேயும் தொடங்கி வைக்கின்றனர்.

ரூ.1 லட்சத்து 8 ஆயிரம் கோடி மதிப்பில், 508 கி.மீ தொலைவிற்கு புல்லட் ரயில் இயக்கப்பட உள்ளது. இந்த திட்டம் வரும் 2022ஆம் ஆண்டு நிறைவு பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

India's first Bullet Train inauguration today.

அடுத்த செய்தி