ஆப்நகரம்

இந்தியாவின் முதல் கடல் விமான சேவை; வாங்க ஒரு ரவுண்ட் போயிட்டு வரலாம்!

கெவாடியாவில் இருந்து கடல் விமான சேவையை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கவுள்ளார்.

Samayam Tamil 31 Oct 2020, 1:18 pm
குஜராத் மாநிலத்தின் அகமதாபாத் நகரின் சபர்மதி ஆற்றங்கரையில் இருந்து கெவாடியாவில் உள்ள ஒற்றுமையின் சிலைக்கு கடல் விமான சேவை இன்று அறிமுகம் செய்யப்படவுள்ளது. சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த நாளான இன்று இந்த சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். இதையொட்டி இன்று இரவு சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது நாட்டின் முதல் கடல் விமான சேவை என்பது குறிப்பிடத்தக்கது.
Samayam Tamil Seaplane service in India


இதற்காக பயன்படுத்தப்படும் விமானம் கனடா நாட்டில் உருவாக்கப்பட்டது. இதில் 19 பேர் வரை அமரலாம். அதிகபட்சமாக 5,670 கிலோ எடையைத் தாங்கக் கூடியது. இந்த சேவை குஜராத் மாநிலத்தின் சுற்றுலாத் துறை வளர்ச்சிக்கு பெரிதும் உதவிகரமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உதான் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த கடல் விமான சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

விமானப் பயண விவரம் (தினசரி விமான சேவை)

* காலை 10.15 - 10.45 (அகமதாபாத் - கெவாடியா)

* காலை 11.45 - 12.15 (கெவாடியா - அகமதாபாத்)

* நண்பகல் 12.45 - பிற்பகல் 1.15 (அகமதாபாத் - கெவாடியா)

* பிற்பகல் 3.15 - 3.45 (கெவாடியா - அகமதாபாத்)

உள்நாட்டு விமானப் பயணம்: கட்டண வரம்பு நிர்ணயத்தில் இப்படியொரு சலுகை!

இது நாளை (நவம்பர் 1) முதல் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வருகிறது. இதற்காக ஆன்லைன் மூலம் டிக்கெட்கள் முன்பதிவு செய்யலாம். இல்லையெனில் அகமதாபாத் அல்லது கெவாடியாவிற்கு சென்றும் டிக்கெட் பெற்றுக் கொள்ளலாம். ஒரு நபருக்கு கட்டணமாக ரூ.1,500 வசூலிக்கப்படுகிறது. இது RCS-UDAN திட்டத்தின் கீழ் நிர்ணயிக்கப்பட்ட கட்டணமாகும்.

அதன்படி ஒவ்வொரு விமானத்திலும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான இருக்கைகள் மட்டும் குறைந்த கட்டணத்திற்கு அளிக்கப்படும். மற்ற இருக்கைகளில் நபர் ஒன்றுக்கு ரூ.4,800 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

அடுத்த செய்தி