ஆப்நகரம்

நிரவ் மோடியை ஒப்படைக்க ஹாங்காங் அரசிடம் இந்தியா கோாிக்கை

வைர வியாபாரி நிரவ் மோடியை இந்தியாவிடம் ஒப்படைக்ககோாி ஹாங்காங் அரசிடம் வெளியுறவுத் துறை அமைச்சகம் கோாிக்கை வைத்துள்ளது.

Samayam Tamil 12 Apr 2018, 11:03 pm
வைர வியாபாரி நிரவ் மோடியை இந்தியாவிடம் ஒப்படைக்ககோாி ஹாங்காங் அரசிடம் வெளியுறவுத் துறை அமைச்சகம் கோாிக்கை வைத்துள்ளது.
Samayam Tamil nirav Modi


பஞ்சாப் நேஷனல் வங்கிக்கு தெரியாமல், அங்குள்ள வங்கி அதிகாரிகளின் உதவியோடு முறைகேடாக பணம் அனுப்பியதில், வங்கிக்கு 12,700 கோடி ரூபாய் நிரவ் மோடி மோசடி செய்து விட்டு குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றார். அவர்களை கைது செய்ய சிபிஐ அதிகாரிகள் சர்வதேச போலீசாரின் உதவியை நாடியுள்ளனர். மேலும், இந்த விவகாரத்தில், பஞ்சாப் நேஷனல் வங்கி அதிகாரிகள், கீதாஞ்சலி நிறுவனத்தின் இயக்குனர் அனியாத் சிவ் ராமன் நாயர் உட்பட நிரவ் மோடியின் நிறுவனத்தினர் பலர் கைதாகி உள்ளனர்.

இந்நிலையில் நிரவ் மோடிக்கு மின்னஞ்சல் மூலம் சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் அவா் விசாரணைக்கு வர மறுத்துள்ளதாக அதிகாாிகள் தொிவித்துள்ளனா். இந்நிலைியல், ஹாங்காங்கில் தங்கியுள்ள நிரவ் மோடியை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்று ஹாங்காங் அதிகாாிகளுக்கு கோாிக்கை விடுத்துள்ளோம் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சக செய்தி தொடா்பாளா் தொிவித்துள்ளாா்.

அடுத்த செய்தி