ஆப்நகரம்

பயணிகளுக்கு தீபாவளிப்பரிசு கொடுத்த இண்டிகோ நிறுவனம் : என்ன பரிசு தெரியுமா ?

தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக, அதிகமான பயணிகளை கையாளும் விமான நிலையங்களில் ஒன்று, திருச்சி விமான நிலையம். ​இங்கிருந்து, ஆந்திர மாநிலத்துக்கு புதிய விமான சேவை துவங்கவிருப்பதாக இண்டிகோ நிறுவனம் தெரிவித்துள்ளது. ​

Samayam Tamil 1 Oct 2019, 4:25 pm
தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக, அதிகமான பயணிகளை கையாளும் விமான நிலையங்களில் ஒன்று, திருச்சி விமான நிலையம். இங்கிருந்து, ஆந்திர மாநிலத்துக்கு புதிய விமான சேவை துவங்கவிருப்பதாக இண்டிகோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
Samayam Tamil indigo


திருச்சி விமான நிலையத்தில் இருந்து, ஐதராபாத் வரை செயல்படும் இந்த விமான சேவை அக்டோபர் மாதம் 27ஆம் தேதி முதல் தொடங்கவிருக்கிறது.

தினசரி சேவையாக செயல்படப்போகும் இந்த சேவை இரவு 09.05 மணிக்கு ஐதராபாத்தில் இருந்து கிளம்பி திருச்சி விமான நிலையத்திற்கு இரவு, 11.30 மணிக்கு வந்து சேரும். 74 இருக்கைகள் கொண்ட ATR 72-600 ரக விமானம் இந்த வழித்தடத்தில் பயன்படுத்தப்படவிருக்கிறது.

ஐ.டி ஊழியர்கள் மற்றும் ஸ்ரீரங்கம் கோயில் யாத்ரீகர்களுக்கு மற்றும் பயணிகளுகு இந்த புதிய விமான சேவை ஒரு தீபாவளிப் பரிசு என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அடுத்த செய்தி