ஆப்நகரம்

அம்மா உணவகத்தை திறந்து வைத்த ராகுல் காந்தி!

இந்திரா உணவகத்தை தவறுதலாக அம்மா உணவகம் என்று ராகுல் காந்தி உச்சரித்த சம்பவம் பெரும் சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது

TOI Contributor 16 Aug 2017, 5:58 pm
பெங்களுரில் இந்திரா உணவகத்தை தவறுதலாக அம்மா உணவகம் என்று ராகுல் காந்தி உச்சரித்த சம்பவம் பெரும் சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது
Samayam Tamil indira canteen or amma canteen rahul gandhis faux pas moment
அம்மா உணவகத்தை திறந்து வைத்த ராகுல் காந்தி!




தமிழகத்தில் ஏழை மக்கள் பசியாற்ற, அம்மா உணவகம் தொடங்கப்பட்டது போல், கர்நாடகாவில் இந்திரா உணவகம் என்ற பெயரில் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி புதனன்று திறந்துவைத்தார்.

அப்போது திறப்பு விழாவில் பேசிய ராகுல், ஏழை மக்களுக்கு குறைந்த செலவில் பசியாற்றுவதற்காக கர்நாடக மாநில காங்கிரஸ் அரசு துவக்கியுள்ள இந்திரா உணவகம் திட்டம் பாராட்டக்குரியது என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், இந்திரா உணவகம் என்பதற்கு பதிலாக அம்மா உணவகம் என்று இரண்டு முறை தவறாக உச்சரித்ததால் கூட்டத்தில் சிரிப்பலை ஏற்பட்டது. பின்னர் சுதாரித்துக் கொண்ட அவர், இந்திரா உணவகம் என்று மழுப்பினார்.

இந்நிகழ்ச்சியில், கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா, மாநில அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

அடுத்த செய்தி