ஆப்நகரம்

மன்மோகன் சிங்குக்கு இந்திராகாந்தி அமைதி விருது.!

இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு, இந்திரா அமைதி காந்தி விருது கிடைத்துள்ளது.

TNN 19 Nov 2017, 10:12 am
இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு, இந்திரா அமைதி காந்தி விருது கிடைத்துள்ளது.
Samayam Tamil indira gandhi award to manmohan sing
மன்மோகன் சிங்குக்கு இந்திராகாந்தி அமைதி விருது.!


அமைதி, வளர்ச்சி மற்றும் ஆயுதப் பரவல் தடை ஆகியவற்றுக்காக ஆண்டுதோறும் வழங்கப்படும் இந்திரா காந்தி விருது, இந்த ஆண்டு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கிடைத்துள்ளது.

தனது பதவிக் காலத்தில் அமெரிக்காவுடன் இணைந்து அணு ஆயுத ஒப்பந்தத்தை மேற்கொண்டதற்காகவும், பருவ நிலை மாறுபாடு விவகாரம் தொடர்பாக உலக நாடுகளுடன் இணைந்து பணியாற்றியதற்காகவும், மன்மோகன் சிங்குக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திரா காந்தி உயிரிழந்த பின் சர்வதேச அளவில் வழங்கப்பட்டு வரும் இந்த விருது கடைசியாக இந்தியாவின் வி‌ண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவுக்கும், ஐ.நா.வின் அகதிகள் நல அமைப்புக்கும் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி