ஆப்நகரம்

இந்திரா காந்தி நினைவு நாள்: நினைவிடத்தில் சோனியா, ராகுல் மரியாதை

இந்திரா காந்தி நினைவு தினத்தை முன்னிட்டு சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.

Samayam Tamil 31 Oct 2018, 10:32 am
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் நினைவு தினத்தை முன்னிட்டு, அவரது நினைவிடத்தில் சோனியா காந்தி, ராகுல் காந்தி, மன்மோகன் சிங் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
Samayam Tamil indira-gandhi-cover-pic
இந்திரா காந்தி நினைவிடத்தில் சோனியா, ராகுல் மரியாதை


இந்தியாவின் இரும்புப் பெண்மணி என்று போற்றப்படும் இந்திரா காந்தியின் நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மரியாதை செலுத்தினார்.

அவருடன் முன்னாள் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.


பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், நமது முன்னாள் பிரதமரான இந்திரா காந்தியின் நினைவு தினமான இன்று அவருக்கு மரியாதை செலுத்துகிறேன்” என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி