ஆப்நகரம்

ராணுவ வீரர்கள் தீபாவளி கொண்டாட்டம்: கடும் குளிரில் ஆடல் பாடல்!

லடாக் எல்லைப் பகுதியில் ராணுவ வீரர்கள் தீபாவளி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

Samayam Tamil 14 Nov 2020, 7:15 pm
இன்று உலகம் முழுக்க பல கோடிக்கணக்கான மக்கள் தீபாவளியை கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், ராணுவ வீரர்களும் எல்லைப் பகுதிகளில் பல்வேறு இடங்களில் தீபாவளியை கொண்டாடி வருகின்றனர்.
Samayam Tamil indo tibetan border police soldiers celebrate diwali in a ladakh post at subzero temperatures
ராணுவ வீரர்கள் தீபாவளி கொண்டாட்டம்: கடும் குளிரில் ஆடல் பாடல்!


இண்டோ திபெத்திய எல்லை காவல் வீரர்கள் கொண்டாட்டம்

துணை ராணுவப் படையான இண்டோ திபத்திய எல்லை காவல் வீரர்கள் இன்று லடாக்கில் 0 டிகிரிக்கும் குறைவான கடும் குளிரில் 17,000 அடி உயரத்தில் தீபாவளியை கொண்டாடினர். இவர்கள் அனைவரும் இந்திய-சீன எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் வீரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

நடனத்துடன் கொண்டாட்டம்

அகல் விளக்கு ஏற்றி, பூஜை செய்து, அனைவரும் நடனமாடி -20 டிகிரி குளிர்நிலையில் தீபாவளியை கொண்டாடினர். லடாக்கில் உள்ள ஒரு சாவடியில் இந்த கொண்டாட்டங்கள் அரங்கேறின. இப்பகுதியில் குளிர்காலத்தில் -40 டிகிரிக்கும் கீழ் குளிரடிக்கும் என்று கூறப்படுகிறது.

​பாட்டு பாடி கொண்டாட்டம்

மேலும், வீரர்கள் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் எழுதிய ‘ஆவோ பிர் பிர் தியா ஜலாயீன்’ கவிதையை பாடி அதை நாட்டுக்கு டெடிகேட் செய்தனர்.

தீபாவளியும் ராணுவ வீரர்களும்

தீபாவளி பண்டிகையன்று எல்லையில் பாதுகாக்கும் ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்துவதற்காக மக்கள் தங்கள் வீட்டில் தனி விளக்கு ஏற்ற வேண்டுமென பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.

அடுத்த செய்தி