ஆப்நகரம்

ஜப்பான் உதவியுடன் தமிழகத்தில் தொழில் நகரம் – மோடி அறிவிப்பு

ஜப்பான் நாட்டின் உதவியுடன் தமிழகம் உள்பட 4 மாநிலங்களில் தொழில் நகரம் அமைக்கப்படும் என்று குஜராத்தில் நடைபெற்ற இந்தியா – ஜப்பான் உச்சி மாநாட்டில் பிரதமா் மோடி அறிவித்துள்ளாா்.

TOI Contributor 14 Sep 2017, 6:01 pm
ஜப்பான் நாட்டின் உதவியுடன் தமிழகம் உள்பட 4 மாநிலங்களில் தொழில் நகரம் அமைக்கப்படும் என்று குஜராத்தில் நடைபெற்ற இந்தியா – ஜப்பான் உச்சி மாநாட்டில் பிரதமா் மோடி அறிவித்துள்ளாா்.
Samayam Tamil industrial town will be created in tamilnadu announced from modi
ஜப்பான் உதவியுடன் தமிழகத்தில் தொழில் நகரம் – மோடி அறிவிப்பு


இரண்டு நாள் சுற்றுப்பயணமாக ஜப்பான் பிரதமா் ஷின்சோ அபே நேற்று மாலை இந்தியா வந்தாா். ஜப்பான் பிரதமருக்கு இந்தியா சாா்பில் சிற்ப்பான வரவேற்பு அளிக்கப்பட்ட நிலையில், அகமதாபாத் மற்றும் மும்பை இடையிலான முதல் புல்லட் ரயில் திட்டத்தை பிரதமர் மோடி மற்றும் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே இன்று காலை துவக்கி வைத்தனர்.

திட்டத்தைத் தொடங்கி வைத்து பேசிய ஷின்சோ அபே, இந்தியாவிற்கும் ஜப்பானிற்கும் இடையிலான இந்த உறவு மற்ற அரசுகளுக்கிடையேயான உறவைக் காட்டிலும் எதிர்கால பார்வை உடையது என்று மகிழ்ச்சிப்பட தொிவித்தாா்.

இதனைத் தொடா்ந்து குஜராத் மாநிம் காந்தி நகா் பகுதியில் இந்திய – ஜப்பான் நாட்டின் உச்சிமாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டின் போது பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. அதில் முக்கிய திட்டமாக தமிழகம் உள்பட 4 மாநிலங்களில் தொழில் நகரங்கள் அமைக்கப்படும் என்று பிரமா் மோடி அறிவித்துள்ளாா்.

ஜப்பான் நாட்டின் உதவியுடன் தொடங்கப்படவுள்ள தொழில் நகரம் அமைக்கப்பட தமிழகம், ஆந்திரா, குஜராத், ராஜஸ்தான் என 4 மாநிலங்கள் தோ்ந்தெடுக்கப்படுகின்றன. சாலை, ரயில், ஆகாய போக்குவரத்து மற்றும் கப்பல் போக்குவரத்து உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு இந்த மாநிலங்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக ஜப்பான் உதவியுடன் தொடங்கப்படும் புல்லட் ரயில் திட்டத்திற்கான 1.10 லட்சம் கோடியில் 88 ஆயிரம் கோடியை ஜப்பான் அரசு மிகக்குறைந்த (0.1 சதவீதம்) வட்டியில் வழங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி