ஆப்நகரம்

பிறந்த சில மணி நேரங்களில் பச்சிளம் குழந்தை உயிரிழப்பு: அரசு மருத்துவமனை அலட்சியம்?

அரசு மருத்துவமனையில் பிறந்து சில மணி நேரங்களே ஆன பச்சிளம் குழந்தை ஆக்சிஜன் சிலிண்டரில் ஏற்பட்ட கோளாறு காரணமாக உயிரிழந்துள்ளது

Samayam Tamil 3 Nov 2019, 1:01 pm
அனந்தப்பூர்: ஆக்ஸிஜன் சிலிண்டரில் பழுது ஏற்பட்டு வெளியான புகை காரணமாக பிறந்து சில மணி நேரங்களே ஆன குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil infant dead


ஆந்திர மாநிலம் அனந்தப்பூர் மாவட்டம் ஹிந்துபூர் அரசு மருத்துவமனையில் சுகுரு பகுதியைச் சேர்ந்த சோஹேல் என்பவர் பிரசவத்திற்காக தனது மனைவி ரூபினாவை நேற்று காலை 11 மணியளவில் அனுமதித்துள்ளார். மாலை 4 மணியளவில் அறுவை சிகிச்சை மூலம் ரூபினாவுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

ஒத்தையா நின்னு அதிகாரிகளை தெறிக்கவிட்ட பாட்டி!

ஆனால், குழந்தை சுவாசிப்பதில் பிரச்சனை இருப்பதாக கண்டறிந்த மருத்துவர்கள் குழந்தைக்கு ஆக்ஸிஜன் பொருத்தி சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில், இரவு 9 மணியளவில் குறைந்த மின்னழுத்தம் காரணமாக ஆக்ஸிஜன் சிலிண்டரில் பழுது ஏற்பட்டு திடீரென புகை வெளிவரத் தொடங்கியது. இதனால் மருத்துவமனையில் இருந்த நோயாளிகள் அலறி அடித்து மருத்துவமனையில் இருந்து வெளியே ஓடினர்.


புகை கண்டு அதிர்ச்சி அடைந்த சோஹேல் குழந்தையை மீட்டு மருத்துவரிடம் கொண்டு சென்று குழந்தைக்கு ஆக்ஸிஜன் செலுத்த மாற்று ஏற்பாடு செய்யுமாறு வலியுறுத்தியுள்ளார். ஆனால் அதற்குள் குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளது.

அரசாங்கத்தையே போலியா நடத்தியிருக்காங்க!

இதனால் மனமுடைந்த பெற்றோர்கள் மருத்துவமனை நிர்வாகத்தின் கவனக்குறைவால் தங்களுடைய குழந்தை உயிரிழக்க நேர்ந்ததாகக் கூறி கதறி அழுதனர். ஆனால், குழந்தை பிறக்கும் போதே சுவாசப் பிரச்சனை இருந்ததாகவும் மனிதாபிமான அடிப்படையில் ஆக்ஸிஜன் கொடுக்கப்பட்டு வந்ததாகவும் ஆக்சிஜன் சிலிண்டர் பழுதால் ஏற்பட்ட புகைக்கும் குழந்தை உயிரிழப்பு சம்பந்தமில்லை என மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

50 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து புதைக்கப்பட்டவர் மீண்டும் உயிருடன் வந்த அதிசயம்...!

அரசு மருத்துவமனையில் பிறந்து சில மணி நேரங்களே ஆன குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அடுத்த செய்தி