ஆப்நகரம்

சீதையைக் கடத்திச் சென்றாரா ராமர்? விசாரிக்க உத்தரவு!

குஜராத் மாநிலத்தின் 12ஆம் வகுப்புப் பாடப்புத்தகத்தில் சீதையை ராமர் கடத்திச்சென்றதாக குறிப்பிடப்பட்டிருப்பது பற்றி விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளதாக அம்மாநில அமைச்சர் ஒருவர் கூறியுள்ளார்.

Samayam Tamil 2 Jun 2018, 9:35 pm
குஜராத் மாநிலத்தின் 12ஆம் வகுப்புப் பாடப்புத்தகத்தில் சீதையை ராமர் கடத்திச்சென்றதாக குறிப்பிடப்பட்டிருப்பது பற்றி விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளதாக அம்மாநில அமைச்சர் ஒருவர் கூறியுள்ளார்.
Samayam Tamil ram-sita-


குஜராத் மாநிலத்தின் 12ஆம் வகுப்பு ஆங்கில பாடப்புத்தகத்தில் காளிதாசரின் ரகுவம்சம் பாடத்தில் 106வது பக்கத்தில் சீதையை ராமர் கடத்திச்சென்றார் (‘Sita abducted by Lord Rama’) என்று கூறப்பட்டுள்ளது. இது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து அரசு தரப்பில் அளித்த விளக்கத்தில் abandoned என்ற வார்த்தைக்குப் பதில் abducted என்ற வார்த்தை தவறுதலாக அச்சடிக்கப்பட்டுவிட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குஜராத்தி வழி கல்வி பயிலும் மாணவர்களுக்கான பாடப்புத்தகத்தில் இந்தத் தவறு இல்லை என்றும் கூறியுள்ளது.

இந்நிலையில், அம்மாநில கல்வித்துறை அமைச்சர் புபேந்திரா, சீதையை ராமர் கடத்திச்சென்றார் என்று அச்சானது டைப்பிங் செய்யும் போது ஏற்பட்ட தவறு என்றார். மேலும், இது பற்றி விசாரிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றும் கூறினார்.

அடுத்த செய்தி