ஆப்நகரம்

மாவோயிஸ்ட் கமாண்டர் இறுதிச் சடங்கில் வரவர ராவ்!

பல்வேறு குற்றங்களில் தொடர்புடையதாக கைதான எழுத்தாளர் வரவர ராவ் மாவோயிஸ்ட் கமாண்டரின் இறுதிச் சடங்கில் பங்குபெற்றது மத்திய நுண்ணறிவுப் பிரிவு விசாரணையில் தெரியவந்துள்ளது

TIMESOFINDIA.COM 3 Sep 2018, 1:07 pm
பல்வேறு குற்றங்களில் தொடர்புடையதாக கைதான எழுத்தாளர் வரவர ராவ் மாவோயிஸ்ட் கமாண்டரின் இறுதிச் சடங்கில் பங்குபெற்றது மத்திய நுண்ணறிவுப் பிரிவு விசாரணையில் தெரியவந்துள்ளது
Samayam Tamil 65650259


மகாராஷ்டிர மாநிலம் பீமா கோரேகான் மோதலைத் தூண்டியது மற்றும் பிரதமர் நரேந்திர மோடியைக் கொல்ல திட்டமிட்டது என பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் 5 சமூக ஆர்வலர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்களில் ஹைதராபாத்தைச் சேர்ந்த வரவர ராவ் என்ற எழுத்தாளர் மாவோயிஸ்ட் உறுப்பினர்களுக்குடன் நெருங்கிய தொடர்பிருப்பதாக பல்வேறு தகவல்கள் மத்திய நுண்ணறிவுப் பிரிவினரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

கடந்த ஏப்ரல் 25ஆம் தேதி மாவோயிஸ்ட் கமாண்டர் ஸ்ரீகாந்த்க்கு மகாராஷ்டிராவின் தெற்கு கட்ச்ரோலி மாவட்டத்தில் நடைபெற்ற அஞ்சலிக் கூட்டத்தில் வரவர ராவ் கலந்துகொண்டிருக்கிறார். முன்னதாக ஏப்ரல் 22ஆம் தேதிதான் ஸ்ரீகாந்த் உட்பட 39 நக்ஸல்கள் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தனர்.

இதேபோல, அக்டோபர் 2016ல் ஒரிசாவின் மால்கங்கரியில் கொல்லப்பட்ட 24 மாவோயிஸ்ட்களில் ஒருவரான கபுகா பிரபாகரின் முதலாம் ஆண்டு அஞ்சலிக் கூட்டத்திலும் ராவ் பங்குபெற்றிருக்கிறார். இந்நிகழ்வு அக்டோபர் 24, 2017 அன்று நடந்திருக்கிறது.

அடுத்த செய்தி