ஆப்நகரம்

விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட இந்து - முஸ்லீம் தம்பதிக்கு பாஸ்போர்ட்; மத்திய அரசு அதிரடி!

மதம் மாறி திருமணம் செய்து கொண்ட தம்பதியின் பாஸ்போர்ட் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Samayam Tamil 21 Jun 2018, 2:07 pm
லக்னோ: மதம் மாறி திருமணம் செய்து கொண்ட தம்பதியின் பாஸ்போர்ட் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
Samayam Tamil Hindu Muslim Couple


உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவைச் சேர்ந்த இஸ்லாமியர் முகமது சித்திக். இவருக்கும் தன்வி செத் என்ற இந்து பெண்ணிற்கும், கடந்த 2007ல் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 6 வயது மகள் இருக்கிறார். இந்த சூழலில் தம்பதி இருவரும், பாஸ்போர்ட் கோரி லக்னோ பாஸ்போர்ட் அலுவலகத்தில் விண்ணப்பித்தனர். கடந்த ஜூன் 20ஆம் தேதி நேர்காணலுக்கு அழைக்கப்பட்டனர்.

இதில் 3வது சுற்றின் போது, தன்வியின் விண்ணப்பம் நிராகரிக்கப்படுவதாக அதிகாரி விகாஸ் மிஸ்ரா தெரிவித்தார். அதற்கு, ‘எனது கணவர் இஸ்லாமியராக இருப்பாதால், எனது குடும்பத்திற்கே எந்தப் பிரச்சனையும் இல்லை’ என்று பதிலளித்துள்ளார். இதையடுத்து கடுமையான வார்த்தைகளால் பேசி, வெளியில் செல்ல அதிகாரி உத்தரவிட்டார்.

இதையடுத்து சித்திக்கை அழைத்து பேசிய அதிகாரி, ’நீங்கள் இந்து மதத்திற்கு மாற வேண்டும். இல்லையெனில் திருமணம் செல்லாது’ எனக் கூறியுள்ளார். பின்னர் அங்கிருந்த ஆர்.பி.ஓ அதிகாரி, நடைபெற்ற நிகழ்விற்கு வருத்தம் தெரிவித்து, விரிவாக கடிதம் எழுதி தரும் படி கேட்டுள்ளார். இதையடுத்து வீடு திரும்பிய தம்பதி, டுவிட்டர் மூலம் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜூக்கு பதிவு ஒன்றை இட்டுள்ளார்.

அதில், ‘நான் ஆதங்கத்துடன் பதிவிடுகிறேன். எனது கணவர் இஸ்லாமியர் என்பதால், என்னுடைய பாஸ்போர்ட் நிராகரிக்கப்பட்டுள்ளது. 12 ஆண்டு கால திருமண வாழ்க்கையில், இது போன்ற ஒரு அவமானம் அடைந்ததில்லை’ என்று குறிப்பிட்டனர். இதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட அதிகாரி விகாஸ் மிஸ்ரா அதிரடியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டார்.

சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளிவிவகார அமைச்சக செயலாளர் டி.எம்.முலாய், உடனடியாக தலையிட்டார். தம்பதியை இன்று பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டனர். இதையடுத்து முகமது சித்திக், தன்வி செத் இருவருக்கும் பாஸ்போர்ட் வழங்கப்பட்டது.

Inter-faith couple harassed at passport office and later get their passports.

அடுத்த செய்தி