ஆப்நகரம்

பொதுக்குழுவை கூட்ட இடைக்காலத் தடை – பெங்களூரு நீதிமன்றம்

அ.தி.மு.க. பொதுக்குழுவை கூட்டுவதற்கு பெங்களூரு நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

TOI Contributor 11 Sep 2017, 7:21 pm
அ.தி.மு.க. பொதுக்குழுவை கூட்டுவதற்கு பெங்களூரு நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
Samayam Tamil interim barrier to the general meeting bengaluru court
பொதுக்குழுவை கூட்ட இடைக்காலத் தடை – பெங்களூரு நீதிமன்றம்


கா்நாடகா அ.தி.மு.க. செயலாளா் புகழேந்தி தொடா்ந்த வழக்கில் பெங்களூரு நீதிமன்றம் பரபரப்பு தீா்ப்பு ஒன்றை வழங்கியுள்ளது.

அந்த தீா்ப்பில் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் சாா்பில் நாளை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த பொதுக்குழுவிற்கு இடைக்காலத் தடை விதிப்பதாக அறிவித்துள்ளது. மேலும், அக்டோபா் 13ம் தேதிக்கு அடுத்த விசாரணையை ஒத்திவைத்து மாவட்ட உாிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

எடப்பாடி பழனிசாமி அணி சாா்பில் 12ம் தேதி பொதுக்குழு கூட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் இந்த கூட்டத்திற்கு தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினா்களுக்கும் அழைப்பு விடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

அறிவிக்கப்பட்டிருந்தபடி தினகரன் ஆதரவு தரப்பு சட்டமன்ற உறுப்பினா்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இருப்பினும் பொதுக்குழுவை கூட்டுவதென்றால் 15 தினங்களுக்கு முன்னதாக முறையாக அழைப்பு விடுக்கப்பட்டிருக்க வேண்டும் என்பது விதிமுறை.

15 தினங்கள்
ஆனால், தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினா்களுக்கு 15 தினங்களுக்கு முன்னா் அழைப்பு விடுக்கப்படவில்லை என்றும், குறுகிய காலத்தில் தான் அழைப்பு விடுக்கப்பட்டது என்றும் கூறி பெங்களூரு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், பொதுக்குழுவை கூட்டுவதற்கு தற்காலிகமாக தடை விதிப்பதாக மாவட்ட உாிமையியல் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

அடுத்த செய்தி