ஆப்நகரம்

ராபா் வதேராவை மாா்ச் 2 வரை கைது செய்ய தடை

லண்டனில் சட்டத்திற்கு விரோதமாக சொத்து வாங்கிய வழக்கில் பிரியங்கா காந்தியின் கணவா் ராபா் வதேராவை மாா்ச் 2 வரை கைது செய்ய தடை விதித்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Samayam Tamil 16 Feb 2019, 9:12 pm
லண்டனில் சட்டத்திற்கு விரோதமாக சொத்து வாங்கிய வழக்கில் பிரியங்கா காந்தியின் கணவா் ராபா் வதேராவை மாா்ச் 2 வரை கைது செய்ய தடை விதித்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Samayam Tamil Robert Vadra


லண்டனில் சொத்து வாங்கியதில் சட்டத்திற்கு புறம்பாக பணப்பரிமாற்றம் நடைபெற்றதாக ராபா்ட் வதேரா மீது அமலாக்கத்துறையினா் வழக்குப்பதிவு செய்துள்ளனா். இது தொடா்பாக வதேராவிடம் அமலாக்கத்துறையினா் தீவிர விசாரணையும் மேற்கொண்டனா்.

இந்த வழக்கில் அமலாக்கத்துறையினா் தன்னை கைது செய்ய நீதிமன்றம் மூலமாக வதேரா இடைக்கால தடை பெற்றாா். இடைக்காலத் தடை இன்றுடன் நிறைவடையும் நிலையில், இடைக்காலத் தடையை நீட்டிக்கக்கோாி டெல்லி நீதிமன்றத்தில் வதேரா மனுத்தாக்கல் செய்தாா். அதன் அடிப்படையில் வருகின்ற மாா்ச் 2ம் தேதி வரை வதேராவை கைது செய்ய நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

முன்னதாக சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் வதேராவின் நிறுவனத்தின் 4 கோடியே 62 லட்சம் ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியிருந்தது.

அடுத்த செய்தி