ஆப்நகரம்

சிதம்பரத்தை கைது செய்ய தடை: ஆக., 7 வரை நீட்டிப்பு

ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை ஆகஸ்ட் 7ஆம் தேதி வரை கைது செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 23 Jul 2018, 3:15 pm
ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை ஆகஸ்ட் 7ஆம் தேதி வரை கைது செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil CHIDAMBARAM-INDIA-POLITICS-ED-MONEY-LAUNDERING


கடந்த 2006-ஆம் ஆண்டில் மத்திய நிதியமைச்சராக ப.சிதம்பரம் இருந்தபோது ஏர்செல் நிறுவனத்தில் மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் நிறுவனம் ரூ.3,500 கோடி முதலீடு செய்தது. இதற்கு வரம்பை மீறி முறைகேடாக அனுமதி வழங்கியதாக ப.சிதம்பரம் மீது குற்றம்சாட்டப்படுகிறார்.

இதே போல, ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம், ரூ.305 கோடி வெளிநாட்டு முதலீடு பெறவும் ப.சிதம்பரம் உதவியதாக குற்றச்சாட்டப்படுகிறது.

இவ்விரு வழக்குகளிலும் முன்ஜாமீன் கோரி ப.சிதம்பரம் இன்று டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுக்கள் இன்று மதியம் விசாரணைக்கு வந்தன.

அப்போது, ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் ப.சிதம்பரத்தை கைது செய்ய விதிக்கப்பட்ட தடை ஆகஸ்ட் 7ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாகவும் ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனு நாளை விசாரிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

அடுத்த செய்தி