ஆப்நகரம்

சர்வதேச விமானப் போக்குவரத்துக்கான தடை ஜூலை 15 வரை நீட்டிப்பு!!

சர்வதேச பயணிகள் விமானப் போக்குவரத்து சேவைக்கு விதிக்கப்பட்டுள்ள தடை ஜூலை 15 ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக, விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Samayam Tamil 26 Jun 2020, 5:46 pm
கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக, சர்வதேச விமானப் போக்குவரத்து சேவை கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
Samayam Tamil ia


அதேசமயம் சரக்கு விமானப் போக்குவரத்து சேவைக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும், பல்வேறு நாடுகளில் இருந்து தாயகம் திரும்ப விரும்பம் தெரிவித்துள்ள இந்தியர்களை அழைத்துவர 'வந்தே பாரத்' திட்டத்தின்கீழ் சிறப்பு விமானங்களும் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், சர்வதேச விமானப் போக்குவரத்து சேவைக்கு சேவைக்கு விதிக்கப்பட்டுள்ள தடை ஜூலை 15 ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக, விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகம் இன்று (ஜூன் 26) அறிவித்துள்ளது.

ஆகஸ்ட் 12 ஆம் தேதி வரை அனைத்து ரயில் சேவைகளும் ரத்து!!

ஆனால் சரக்கு விமானங்கள், சிறப்பு விமானங்களை இயக்க எந்த தடையும் இல்லை. அவற்றை வழக்கம் போல் இயக்கலாம் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது. அத்துடன், குறிப்பிட்ட வழித்தடங்களில் தேவையை கருதியும் விமானங்களை இயக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமுடக்க நடைமுறைகளில் மேலும் பல்வேறு தளர்வுகளை (அன்லாக் 2.0) மத்திய அரசு ஜூன் 30 ஆம் தேதி அறிவிப்புகளை வெளியிடவுள்ளதாகவும், அதில் முக்கியமாக, டெல்லி -நியூயார்க், மும்பை -நியூயார்க் இடையே பயணிகள் விமானப் போக்குவரத்து சேவையை மீண்டும் துவக்க அனுமதி அளிக்கப்படும் என, ஏற்கெனவே தகவல் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி