ஆப்நகரம்

குல்பூஷண் ஜாதவின் மரண தண்டனையை நிறைவேற்ற தடை: சர்வதேச நீதிமன்றம்

குல்பூஷண் ஜாதவுக்கு பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம் அளித்த மரண தண்டனை ரத்து செய்து சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

TNN 18 May 2017, 6:26 pm
குல்பூஷண் ஜாதவுக்கு பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம் அளித்த மரண தண்டனை ரத்து செய்து சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Samayam Tamil international court of justice to pronounce order in kulbhushan jadhav case
குல்பூஷண் ஜாதவின் மரண தண்டனையை நிறைவேற்ற தடை: சர்வதேச நீதிமன்றம்


இந்திய கடற்படை அதிகாரி குல்பூஷண் ஜாதவுக்கு பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம் அளித்த மரண தண்டனைக்கு எதிரான வழக்கு கடந்த 15ஆம் தேதி நெதர்நாந்து நாட்டின் தி ஹேக் நகரில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தில், முன்னாள் விசாரிக்கப்பட்டது.

குல்பூஷணுக்கு விதிக்கப்பட்ட தண்டனை கேலிக்கூத்தானது என்றும் வியன்னா மனித உரிமைகள் மாநாட்டில் போடப்பட்ட தீர்மானங்களை காற்றில் பறக்கவிடும் விதத்தில் உள்ளது என்றும் இந்தியா தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. மேலும், பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றத்தின் தீர்ப்பை செல்லாதாததாக ஆக்கும் வகையில் சர்வதேச நிதிமன்றம் தீர்ப்பளிக்க வேண்டும் என்றும் அதுவரை குல்பூஷணுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை நிறைவேற்றப்படக்கூடாது என்றும் வலியுறுத்தப்பட்டது.

பின், பாகிஸ்தரப்பு வாதங்கள் கேட்கப்பட்டன. உளவாளிக்கு மனித உரிமைகளின் அடிப்படையில் தீர்ப்பளிக்க வேண்டிய அவசியமில்லை. குல்பூஷண் இந்தியர் என்பதையே இந்தியா நிரூபிக்கத் தவறிவிட்டது. குல்பூஷணுக்கு அளித்த தீர்ப்பை எதிர்த்து மனு தாக்கல் செய்திருப்பதே தேவைற்றது என்று பாகிஸ்தான் தரப்பு வாதத்தில் கூறப்பட்டது.



இரு தரப்பு வாதங்களையும் கேட்ட பின், மே 18ஆம் தேதி சர்வதேச நீதிமன்றம் இந்த வழக்கின் தீர்ப்பை அளிக்கும் என்று அறிவிக்கப்பட்டது. இதன்படி, இன்று (மே 18) இந்த வழக்கின் தீர்ப்பை சர்வதேச நீதிமன்றம் வழங்கியது. இத்தீர்ப்பில் கூறப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள்,
1. குல்பூஷண் ஜாதவுக்கு அளித்த தீர்ப்பின் மீது இந்தியாவின் கோரிக்கை நியாமனாது.

2. இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளும் குல்பூஷண் இந்தியர் என்பதை ஏற்றுக்கொண்டிருக்கின்றன.

3. குல்பூஷண் ஜாதவுக்கு பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம் அளித்த மரண தண்டனை ரத்து செய்து சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

4. மறு உத்தரவு வரும் வரை குல்பூஷணுக்கு அளித்த தண்டனையை நிறைவேற்ற தடைவிதித்து உத்தரவு.

5. இந்திய தரப்பிலிருந்து குல்பூஷண் ஜாதவை சந்திப்பதற்கு பாகிஸ்தான் அனுமதிக்க வேண்டும்.

6. பாகிஸ்தான் குறிப்பிட்ட படியே குல்பூஷண் தீவிரவாதியாக இருந்தாலும், நியாமான முறையில் தீர்ப்பு வழங்கப்பட வேண்டும்.

அடுத்த செய்தி