ஒவ்வொரு குடிமகனுக்கும் 50 எம்பி வேகத்தில் 5 ஜி பிராட்பேண்ட் சேவை வழங்குதல், 40 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உள்ளிட்டவைகள் அடங்கிய தேசிய டிஜிட்டல் தகவல்தொடர்பு திட்டத்தின் வரைவுக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.
முழு வரைவு திட்டத்தைக் காண: http://dot.gov.in/sites/default/files/DNDCP2018.pdf
2018ம் ஆண்டுக்கான தேசிய டிஜிட்டல் தகவல்தொடர்பு திட்டத்தின் வரைவு திட்டத்தை இந்திய தொலைத்தொடர்புதுறை கடந்த மே மாதம் வெளியிட்டிருந்தது. அதில், 2022 ஆம் ஆண்டுக்குள் நடைமுறைப்படுத்த வேண்டிய திட்டங்களை விவரித்துள்ளது. அதில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய நோக்கங்கள்:
1. அனைவருக்கும் பிராட்பேண்ட் சேவை
2. தொலைத்தொடர்பு துறையில் புதிதாக 4 மில்லியன் வேலைவாய்ப்புகள்,
3. தொலைத்தொடர்பில் உலக அளவில் தற்போது 134 இடத்தில் இருக்கும் நமது இந்தியாவை, முதல் 50 இடங்களுக்குள் கொண்டு வருதல்
மேலும் சில முக்கிய வரைவு திட்டங்கள்
A. இந்திய குடிமகன் ஒவ்வொருவருக்கும் 50 Mbps வேகத்தில் பிராட்பேண்ட் இணைய சேவைகளை ஏற்படுத்துதல்
B. 2020 ம் ஆண்டுக்குள் இந்தியாவில் உள்ள அனைத்து கிராம பஞ்சாயத்துக்களுக்கும் 1Gbps வேகத்தில் இணைய சேவைகளை ஏற்படுத்துதல். அதே போல், 2022ம் ஆண்டுக்குள் அதனை 10 Gbps ஆக வேகத்தை உயர்த்துதல்
C. வளர்ந்து வரும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் 100 Mbps வேகத்தில் இணைய சேவைகளை வழங்குதல்
D. 50% குடும்பங்களுக்கு தொலைபேசிஇணைப்பை ஏற்படுத்துதல்
E. 2020ம் ஆண்டுக்குள் 55% மொபைல் சந்தாதாதர்களையும், 2022ம் ஆண்டுக்குள் 65% சந்தாதாதர்களயும் உருவாக்குதல்
F. பொதுமக்கள் பயன்பெறும் வகையில் 2020ம் ஆண்டுக்குள் 5 மில்லியன் பொது வைஃபை ஹாட்ஸ்பாட்டுக்களையும், 2022ம் ஆண்டுக்குள் 10 மில்லியன் வைஃபை ஹாட்ஸ்பாட்டுக்களையும் அமைத்தல்
G. அனைத்து பகுதிகளிலும் தொலைத்தொடர்பு சேவைகளை உறுதிபடுத்துதல்
இவ்வாறு அந்த வரைவு திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது
முழு வரைவு திட்டத்தைக் காண: http://dot.gov.in/sites/default/files/DNDCP2018.pdf
2018ம் ஆண்டுக்கான தேசிய டிஜிட்டல் தகவல்தொடர்பு திட்டத்தின் வரைவு திட்டத்தை இந்திய தொலைத்தொடர்புதுறை கடந்த மே மாதம் வெளியிட்டிருந்தது. அதில், 2022 ஆம் ஆண்டுக்குள் நடைமுறைப்படுத்த வேண்டிய திட்டங்களை விவரித்துள்ளது. அதில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய நோக்கங்கள்:
1. அனைவருக்கும் பிராட்பேண்ட் சேவை
2. தொலைத்தொடர்பு துறையில் புதிதாக 4 மில்லியன் வேலைவாய்ப்புகள்,
3. தொலைத்தொடர்பில் உலக அளவில் தற்போது 134 இடத்தில் இருக்கும் நமது இந்தியாவை, முதல் 50 இடங்களுக்குள் கொண்டு வருதல்
மேலும் சில முக்கிய வரைவு திட்டங்கள்
A. இந்திய குடிமகன் ஒவ்வொருவருக்கும் 50 Mbps வேகத்தில் பிராட்பேண்ட் இணைய சேவைகளை ஏற்படுத்துதல்
B. 2020 ம் ஆண்டுக்குள் இந்தியாவில் உள்ள அனைத்து கிராம பஞ்சாயத்துக்களுக்கும் 1Gbps வேகத்தில் இணைய சேவைகளை ஏற்படுத்துதல். அதே போல், 2022ம் ஆண்டுக்குள் அதனை 10 Gbps ஆக வேகத்தை உயர்த்துதல்
C. வளர்ந்து வரும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் 100 Mbps வேகத்தில் இணைய சேவைகளை வழங்குதல்
D. 50% குடும்பங்களுக்கு தொலைபேசிஇணைப்பை ஏற்படுத்துதல்
E. 2020ம் ஆண்டுக்குள் 55% மொபைல் சந்தாதாதர்களையும், 2022ம் ஆண்டுக்குள் 65% சந்தாதாதர்களயும் உருவாக்குதல்
F. பொதுமக்கள் பயன்பெறும் வகையில் 2020ம் ஆண்டுக்குள் 5 மில்லியன் பொது வைஃபை ஹாட்ஸ்பாட்டுக்களையும், 2022ம் ஆண்டுக்குள் 10 மில்லியன் வைஃபை ஹாட்ஸ்பாட்டுக்களையும் அமைத்தல்
G. அனைத்து பகுதிகளிலும் தொலைத்தொடர்பு சேவைகளை உறுதிபடுத்துதல்
இவ்வாறு அந்த வரைவு திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது