ஆப்நகரம்

பி.என்.பி. மோசடி: சோக்ஸிக்கு இன்டர்போல் ரெட் கார்னர் நோட்டீஸ்

பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி வழக்கு தொடர்பாக நிரவ் மோடியின் மாமா மேஹுல் சோக்ஸிக்கு இன்டர்போல் ரெட் கார்னர் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. நிரவ் மோடிக்கு கடந்த ஜூலை மாதம் இன்டர்போல் ரெட் கார்னர் நோட்டீஸ் வழங்கப்பட்டது.

Samayam Tamil 13 Dec 2018, 11:54 am
பஞ்சாப் நேஷனல் வங்கி இந்தியாவின் 2வது பெரிய அரசு வங்கி ஆகும். இவ்வங்கியில் சுமார் 15,000 கோடி ரூபாய் கடன் பெற்று மோசடி செய்ததாக வைர வியாபாரி நிரவ் மோடி மற்றும் அவரது மாமா மேஹுல் சோக்ஸி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
Samayam Tamil Tamil-image


உடனே நிரவ் மோடி தன் குடும்பத்தினருடன் வெளிநாட்டுக்குத் தப்பி தலைமறைவாகிவிட்டார். போலி பாஸ்போர்ட் மூலம் அவர் வெவ்வேறு நாடுகளுக்குச் சென்றுவருவதாகக் கூறப்படுகிறது. இதனிடையே இந்தியாவில் உள்ள நிரவ் மோடி, மெஹுல் சோக்ஸி ஆகியோரின் சொத்துக்களையும் அமலாக்கத்துறை அதிகாரிகள் முடக்கியுள்ளனர்.

இந்நிலையில் இந்த வழக்கில் தொடர்புடைய மேஹுல் சோக்ஸிக்கு இன்டர்போல் அமைப்பு ரெட் கார்னர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இதன் மூலம் அவர் இன்டர்போல் அமைப்பைச் சேர்ந்த எந்த நாட்டுக்குச் சென்றாலும் அந்நாட்டு அரசு அவரை உடனே கைது செய்யும்.

ஏற்கெனவே நிரவ் மோடிக்கு கடந்த ஜூலை மாதம் இன்டர்போல் ரெட் கார்னர் நோட்டீஸ் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி