ஆப்நகரம்

திறந்து வைக்கப்பட்ட அலுவலகத்திலேயே சிறை...இதுதான் காலத்தின் கொடுமை!!

சிபிஐ அதிகாரிகளால் நேற்று இரவு கைது செய்யப்பட்ட முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் நேற்று இரவு முழுவதும் சிபிஐ விருந்தினர் அலுவலகத்தின் கீழ் தளத்தில் தனி அறையில் வைக்கப்பட்டார். அவரால் திறந்து வைக்கப்பட்ட இந்த அலுலகத்திலேயே அவர் சிறை வைக்கப்பட்டதுதான் காலத்தின் கொடுமை.

Samayam Tamil 22 Aug 2019, 11:59 am
கடந்த 2008 முதல் 2012ஜூலை வரை மத்திய உள்துறை அமைச்சராக ப. சிதம்பரம் செயல்பட்டு வந்தார். 2011, ஜூன் 30 ஆம் தேதி டெல்லியில் சிபிஐ அலுவகத்தின் திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டு இருந்தார். இவருடன் அப்போது பிரதமராக இருந்த மன்மோகன் சிங்கும் கலந்து கொண்டார்.
Samayam Tamil CBI C


அதே சிபிஐ அலுலகத்தில் நேற்று இரவு முழுவதும் சிதம்பரம் கைது செய்து வைக்கப்பட்டார். டெல்லியில் ஜோர் பாக்கில் உள்ள வீட்டில் இருந்து சிதம்பரத்தை கைது செய்த சிபிஐ நேராக அவரை சிபிஐ விருந்தினர் மாளிகைக்கு அழைத்து சென்றது.

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் இவருக்கு டெல்லி உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்காத நிலையில் உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்திருந்தார். மனுவில் பிழை இருந்ததால், பிழையை திருத்தி மீண்டும் தாக்கல் செய்யுமாறு நீதிபதி தெரிவித்து இருந்தார்.

DMK: சிதம்பரம் கைதும்...டெல்லியியை கலக்க இருக்கும் திமுக போராட்டமும்...!!

ஆனால், நேற்று வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட மாட்டது என்று நீதிபதி கூறினார். மேலும், மீண்டும் பட்டியல் ஆக வேண்டும் தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில்தான் சிதம்பரத்தை நேற்று இரவு சிபிஐ அதிகாரிகள் சிதம்பரத்தின் வீட்டு சுவரை தாண்டிக் குதித்து சென்று கைது செய்தனர்.

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கைது- அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம்!

இது மிகப்பெரிய அளவில் சர்ச்சையை கிளப்பியுள்ளது. ஒரு முன்னாள் மத்திய நிதியமைச்சரை சுவர் ஏறி குதித்துச் சென்று கைது செய்யு அளவிற்கு அவர் ஒன்றும் தீவிரவாதி கிடையாது என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும், ஜாமீன் மனு நிலுவையில் இருக்கும்போது எப்படி கைது செய்யலாம் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

73 வயதாகும் சிதம்பரம் கைது செய்யப்பட்டு நேற்று இரவு 10 மணிக்கு சிபிஐ அலுவலகம் அழைத்து செல்லப்பட்டார். அப்போது, உடனடியாக அவருக்கு மருத்துவ பரிசோதனையும் செய்யப்பட்டது. ராம் மனோகர் லோகியா மருத்துவமனையில் இருந்து வந்த மருத்துவர்கள் பரிசோதனை செய்தனர். இதன் பின்னர், சிபிஐ விருந்தினர் மாளிகையில் இருந்த ஒரு தனி அறையில் நேற்று இரவு முழுவதும் பொழுதைக் கழித்தார்.

என் தந்தை எங்கேயும் ஓடி ஒளியவில்லை: கார்த்தி சிதம்பரம்

இன்று காலை 10மணி முதல் சிபிஐ துணை எஸ்பி ஆர் பார்த்தசாரதி சிதம்பரத்திடம் விசாரணை மேற்கொள்கிறார். இந்த விசாரணையை பார்த்தசாரதிதான் மேற்கொண்டு வருகிறார்.

ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்துக்கு சொந்தக்காரர் பீட்டர் மற்றும் இந்திராணி முகர்ஜி. இந்திராணியின் மகள் ஷீனா போரா கொலை வழக்கில் பீட்டர் மற்றும் இந்திராணி இருவரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்திராணியிடம் நடத்தப்பட்ட விசாரணையில், சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தின் நிறுவனத்துக்கு பணம் கையாடல் செய்யப்பட்டு இருப்பதை ஒப்புக் கொண்டதாக தகவல் வெளியானது. இதையடுத்தே கார்த்தி சிதம்பரம் மற்றும் சிதம்பரத்தின் மீதான விசாரணையும் சூடுபிடித்தது.

இந்தக் குற்றச்சாட்டை தொடர்ந்து சிதம்பரம் மறுத்து வருகிறார். கன்சல்டன்சி நிறுவனத்துக்கு பணம் கையாடல் நடந்ததாக கூறப்படும் குற்றச்சாட்டுக்கும் தனக்கும், தனது மகனுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்று சிதம்பரம் மறுத்து வருகிறார். இன்று சிபிஐ இதுதொடர்பாக சிதம்பரத்தை விசாரிக்கிறது.

அடுத்த செய்தி