ஆப்நகரம்

சிதம்பரம் அறிவாளி, சாதுர்யமானவர்: அமலாக்கத்துறை விவாதம்!!

குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யும் வரை ஐஎன்எக்ஸ் மீடியா தொடர்பான வழக்கில் எந்த ஆவணத்தையும் சிதம்பரத்திடம் கொடுக்க முடியாது என்று உச்ச நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

Samayam Tamil 28 Aug 2019, 3:49 pm
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் அமலாக்கத்துறை தன்னை கைது செய்வதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு மீது தற்போது உச்ச நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வருகிறது.
Samayam Tamil INX Media


விசாரணையின்போது, ''சிதம்பரம் அறிவாளி, சாதுர்யம் மிக்கவர். சிதம்பரத்தை கைது செய்தது அனைத்தும் சட்டப்படியே நடந்துள்ளது. சட்டவிரோத பண பரிமாற்றத்திற்கு கடுமையான தண்டனை அளிக்க வேண்டும் என்று பல்வேறு நாடுகளை நாம் கோரி வருகிறோம். அவ்வாறு கிடைக்கும் பணத்தை பயன்படுத்துவதும் குற்றமே'' என்று அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் எஸ்ஜி மேத்தா வாதிட்டார்.

அமலாக்கத்துறை விசாரணையை எழுத்துபூர்வமாக வழங்க வேண்டும்: சிதம்பரம் கோரிக்கை!!

மேலும் மேத்தா தனது வாக்குவாதத்தில், ''சட்டவிரோத பண பறிமாற்றம் செய்ததற்கான ஆதாரம் தேதியுடன் இருக்கிறது. நீதிமன்றம் கோரினால் அதை தாக்கல் செய்ய தயாராகவே இருக்கிறோம். சிதம்பரத்தை கைது செய்வதற்கான அனைத்து உரிமையும் உள்ளது. சட்டரீதியாக இருக்கும் உரிமையை குறைக்க உச்ச நீதிமன்றத்தால் முடியாது.

சிதம்பரத்துக்கு வெளிநாட்டில் சொத்து இருப்பதற்கான அனைத்து ஆதாரங்களும் எங்களிடம் உள்ளது. வெளிநாட்டில் அவருக்கு இருக்கும் பினாமி சொத்துக்கள் குறித்த தகவல்கள் எங்களிடம் உள்ளது. வெளிநாட்டு நீதிமன்றங்களிடம் இருந்து letters rogatory என்ற முறையில் தகவல்கள் பெறப்பட்டுள்ளன. இந்த நிலையில் உச்ச நீதிமன்றம் தலையிடுவது எங்களது சட்ட உரிமைகளில் தலையிடுவதாக அமையும்'' என்றார்.

ஐநாவில் ராகுல் காந்தியை கோர்த்துவிட்ட பாகிஸ்தான்: புலம்பும் காங்கிரஸ்!!

அமலாக்கத்துறை வழக்கில் தன்னை கைது செய்யக் கூடாது என்றும் இதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்றும் ஜாமீன் கோரி சிதம்பரம் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இருந்தார். இன்று வரை கைதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது தொடர்ந்து வழக்கு நடந்து வருகிறது. மீண்டும் கைதுக்கான காலக்கெடு நீட்டிப்பு வழங்கப்படுமா என்பது இன்னும் சிறிது நேரத்தில் தெரிந்துவிடும்.

அடுத்த செய்தி