சிபிஐ புதிய இயக்குநராக மத்திய பிரதேசம் மாநில் டிஜிபி ரிஷிகுமாா் சுக்லா நியமனம் செய்யப்பட்டுள்ளாா். இடைக்கால இயக்குநராக நியமிக்கப்பட்ட நாகேஷ்வர ராவ் விடுவிக்கப்பட்டுள்ளாா்.
சி.பி.ஐ. இயக்குநராக இருந்த அலோக் வர்மாவுக்கும், சிறப்பு இயக்குநரான ராகேஷ் அஸ்தானாவுக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டது. இருவரும் ஒருவா் மீது ஒருவா் பரஸ்பரம் குற்றம் சாட்டிக்கொண்டனா். இதனைத் தொடா்ந்து இருவரையும் கட்டாய விடுப்பில் அனுப்ப மத்திய அரசு உத்தரவிட்டது.
மேலும் இடைக்கால இயக்குநராக நாகேஷ்வர ராவ் நியமிக்கப்பட்டாா். தன் மீதான நடவடிக்கைக்கு எதிராக இயக்குநா் அலோக் வர்மா உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தாா். இதில் அலோக் வர்மா வெற்றி பெற்றதைத் தொடா்ந்து அவா் மீண்டும் சிபிஐ இயக்குநராக நியமிக்கப்பட்டாா்.
ஆனால், அவரை தீயணைப்பு மற்றும் ஊா்க்காவல் படை இயக்குநராக நியமனம் செய்து அரசு உத்தரவிட்டது. இதனைத் தொடா்ந்து அவா் தனது பதவியை ராஜினாமா செய்தாா். மேலும் இடைக்கால இயக்குநா் நாகேஷ்வர ராவ் நியமனத்தை எதிா்த்தும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
பரபரப்பான சூழலில் பிரதமா் நரேந்திர மோடியின் இல்லத்தில் புதிய இயக்குநரை தோ்வு செய்வதற்கான கூட்டங்கள் நடைபெற்றன. இந்நிலையில், சி.பி.ஐ. புதிய இயக்குநராக மத்திய பிரதேசத்தைச் சோ்ந்த ஐபிஎஸ் அதிகாாி ரிஷிகுமாா் சுக்லா நியமனம் செய்யப்பட்டுள்ளாா். மேலும் இடைக்கால இயக்குநராக நியமிக்கப்பட்ட நாகேஷ்வர ராவ் அந்த பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளாா்.
சி.பி.ஐ. இயக்குநராக இருந்த அலோக் வர்மாவுக்கும், சிறப்பு இயக்குநரான ராகேஷ் அஸ்தானாவுக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டது. இருவரும் ஒருவா் மீது ஒருவா் பரஸ்பரம் குற்றம் சாட்டிக்கொண்டனா். இதனைத் தொடா்ந்து இருவரையும் கட்டாய விடுப்பில் அனுப்ப மத்திய அரசு உத்தரவிட்டது.
மேலும் இடைக்கால இயக்குநராக நாகேஷ்வர ராவ் நியமிக்கப்பட்டாா். தன் மீதான நடவடிக்கைக்கு எதிராக இயக்குநா் அலோக் வர்மா உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தாா். இதில் அலோக் வர்மா வெற்றி பெற்றதைத் தொடா்ந்து அவா் மீண்டும் சிபிஐ இயக்குநராக நியமிக்கப்பட்டாா்.
ஆனால், அவரை தீயணைப்பு மற்றும் ஊா்க்காவல் படை இயக்குநராக நியமனம் செய்து அரசு உத்தரவிட்டது. இதனைத் தொடா்ந்து அவா் தனது பதவியை ராஜினாமா செய்தாா். மேலும் இடைக்கால இயக்குநா் நாகேஷ்வர ராவ் நியமனத்தை எதிா்த்தும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
பரபரப்பான சூழலில் பிரதமா் நரேந்திர மோடியின் இல்லத்தில் புதிய இயக்குநரை தோ்வு செய்வதற்கான கூட்டங்கள் நடைபெற்றன. இந்நிலையில், சி.பி.ஐ. புதிய இயக்குநராக மத்திய பிரதேசத்தைச் சோ்ந்த ஐபிஎஸ் அதிகாாி ரிஷிகுமாா் சுக்லா நியமனம் செய்யப்பட்டுள்ளாா். மேலும் இடைக்கால இயக்குநராக நியமிக்கப்பட்ட நாகேஷ்வர ராவ் அந்த பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளாா்.