ஆப்நகரம்

கொரோனா பரவலுக்கு காரணம்: மக்களை கைகாட்டும் ஐசிஎம்ஆர்

இந்தியாவில் கொரோனா பரவலுக்கு பொறுப்பற்ற மக்களே காரணம் என ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.

Samayam Tamil 26 Aug 2020, 6:52 am
கொரோனாவுக்கான தடுப்பு மருந்து கண்டறியும் பணிகள் சர்வதேச அளவில் தீவிரமாக நடைபெற்றுவருகிறது. ஒன்பது மாதங்களாக உலகை அச்சுறுத்தி வரும் இந்த வைரஸை மருத்துவ நிபுணர்கள் எப்போது முடிவுக்கு வருவார்கள் என்று மக்கள் எதிர்பார்த்துள்ளனர். ஆனால் இந்தியாவில் பொறுப்பில்லாத மக்களால்தான் கொரோனா வைரஸ் பரவியுள்ளதாக ஐசிஎம்ஆர் இயக்குநர் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil covid 19 in india


"இளைஞர்களோ அல்லது வயதானவர்களோ, முகக் கவசம் அணியாமல் பொறுப்பற்ற முறையில் நடந்துகொள்பவர்களால்தான் இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவுகிறது” என்று ஐசிஎம்ஆர் இயக்குநர் பல்ராம் பார்கவா கூறினார்.

இந்தியாவில் கொரோனாவுக்கான தடுப்பு மருந்து கண்டறியும் பணி தீவிரமடைந்து வருகிறது. மூன்று தடுப்பு மருந்துகள் பரிசோதனையில் உள்ளன.

பள்ளிகள் திறப்பு: தமிழ்நாடு அரசு அதிகாரபூர்வ முடிவு!

“சீரம் இன்ஸ்டிடியூட் தடுப்பு மருந்து இரண்டாம் கட்டம் 2 (பி) மற்றும் மூன்றாம் கட்ட சோதனைகளில் உள்ளது. மற்றும் பாரத் பயோடெக் மற்றும் ஸைடஸ் காடிலாவின் தடுப்பு மருந்துகள் முதல் கட்ட சோதனையை நிறைவு செய்துள்ளன ”என்று டாக்டர் பார்கவா கூறினார்.

இந்தியாவில் நேற்று மட்டும் புதிதாக 60 ஆயிரத்து 975 பேர் கொரோனா வைரஸால் பாதிகப்பட்டுள்ள நிலையில் மொத்த பாதிப்பு 31 லட்சத்து 67 ஆயிரத்து 233ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா தடுப்பூசி இரண்டாம்கட்ட பரிசோதனை தொடக்கம்!!

மேலும் ஒரே நாளில் 848 பேர் உயிரிழந்துள்ள நிலையில் பலி எண்ணிக்கை 58 ஆயிரத்து 390 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 7 லட்சத்து 04 ஆயிரத்து 348 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது மொத்த பாதிப்பு எண்ணிக்கையில் 22.24 சதவீதம் ஆகும்.

அடுத்த செய்தி