ஆப்நகரம்

Fact Check: சைக்கிள் சிறுமி ஜோதி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டாரா? பரவும் வதந்தி

பாதிக்கப்பட்டவர் வேறு ஒரு ஜோதி. சம்பவம் உண்மை என்றாலும், பரப்பப்படும் படம் வேறொருவருடையது என்பதை தனிமனிதர்கள் உணர வேண்டும்.

Samayam Tamil 5 Jul 2020, 1:11 am
1200+ கி.மீ சைக்கிளில் தந்தையை அழைத்துச் சென்ற ஜோதி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டார் என்று செய்திகள் சமூக வலதளங்களில் பரவின. இது தொடர்பாக விசாரித்தபோது அது உண்மை அல்ல என்பது தெரிய வந்தது.
Samayam Tamil cycle girl jyoti


பிகார் மாநிலத்திலுள்ள தர்பாங்காவுக்கு தன் தந்தையை சைக்கிளில் வைத்தே அழைத்துச் சென்ற ஜோதி என்ற பெண்ணை இந்தியாவே திரும்பிப் பார்த்தது. இந்நிலையில், இந்தப்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் என்று இந்தப் பெண்ணின் படத்துடன் பலரும் ட்விட்டரில் பகிர்ந்தனர்.



உண்மை என்ன?

பிகார் மாநிலம் தர்பாங்காவில் ஜோதி என்ற பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டுள்ளார். சம்பவ நடந்த இடம் தர்பாங்கா என்பதும், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட பெண்ணின் பெயர் ஜோதி என்பதும், இந்தப்பெண் ஜோதி சைக்கிளில் சென்ற இடமும் பிகார் மாநிலம் தர்பாங்கா என்பதும்தான் இந்தக் குழப்பங்களுக்குக் காரணம்.


பாதிக்கப்பட்ட ஜோதிக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் என்ற தனிமனித அறச்சீற்றத்தில் மக்கள் இதனை வேகமாகப் பகிரத் தொடங்கி விட்டனர். ஆனால், அவர் வேறு ஒரு ஜோதி. சம்பவம் உண்மை என்றாலும், பரப்பப்படும் படம் வேறொருவருடையது என்பதை தனிமனிதர்கள் உணர வேண்டும்.

மற்றபடி, சைக்கிள் சிறுமி ஜோதி பாலியல் வன்கொடுமை செய்ய்ப்பட்டார் என்று பரவும் செய்தி பொய்யானது.

பாதிக்கப்பட்ட சிறுமி யார்?

மாம்பழங்களைத் திருடிய குற்றத்துக்காக பாலியல் வன்கொடுமை செய்யப்ப்பட்டு கொல்லப்பட்டுள்ளார் இந்த 14வயது சிறுமியான ஜோதி. இதில் குற்றவாளியான அர்ஜூன் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். இந்தக் குற்றத்தில் அர்ஜூனின் மனைவியும் குற்றவாளியாகக் கருதப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி