ஆப்நகரம்

Independence Day: பள்ளிகளில் கொடியேற்றுவது வெறும் சடங்குதானா?

பள்ளிகளில் கொடியேற்றுவதன் நோக்கம் குழந்தைகள் மத்தியில் நாட்டுப்பற்றுக்கும் ஒற்றுமைக்கும் வழிவகுப்பதே. குழந்தைகளையே அழைக்க வேண்டாம் என்ற பிறகு வெறுமனே கொடியேற்றுவதில் பலன் என்ன?

Authored byபாம்பன் மு.பிரசாந்த் | Samayam Tamil 1 Aug 2022, 9:58 am
உலகம் மொத்தமும் கொரோனாவின் பிடியில் சிக்கித்தவிக்கும் இந்த காலகட்டத்திலும் கூட , தன் 74ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடி வருகிறது இந்தியா. இதை கவனிக்கும்போதே நம்மால் புரிந்து கொள்ள முடியும், இந்த விழா இந்தியாவுக்கு எவ்வளவு முக்கியமானது என்பதை.
Samayam Tamil is flag hoisting in schools just a simple duty
Independence Day: பள்ளிகளில் கொடியேற்றுவது வெறும் சடங்குதானா?


ஏறக்குறைய 300 ஆண்டுகளாக இந்தியாவின் எல்லா நகர்வுகளையும் கட்டுக்குள் வைத்திருந்த இங்கிலாந்து நிறுவனம், தன் மூட்டை முடிச்சுகளோடு அவர்களது தாயகம் திரும்பியதையடுத்து, இந்தியா தனியுரிமை கொண்ட சுதந்திர நாடாக மாறியது.

எளிமையாக வெறும் மூன்று வரிகளில் இதனை எழுதிவிட முடிகிறது. ஆனால், உண்மையில் அது அவ்வளவு எளிதாக நடந்து விடவில்லை. இந்தியர்களின் அப்போதைய ஒற்றுமையின்மைக்கு கிடைத்த தண்டனைதான் அந்த 200 ஆண்டுகால அடிமைத்தனம். இப்படி இருந்த ஒரு நாட்டுக்கு கிடைத்த சுதந்திரம், ஏதோ மந்திரத்தால் விளைந்த மாங்காய் இல்லை. கோடிக்கணக்கான உயிர்களை விலையாகக் கொடுத்து பெற்ற பெரும்பொக்கிஷம் அது.

மீண்டும் ஒருமுறை இதே தவறு நடந்துவிடக்கூடாது என்பதற்காக மீண்டும் மீண்டும் தேசத்தின் ஒற்றுமை, சிறப்பு, தனித்துவங்கள் ஆகியவற்றை நம் அடுத்த தலைமுறைப் பிள்ளைகளுக்கும் உணர்த்தும் வகையில்தான் பள்ளிகளில் சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டு வருகிறது.

கல்வி அமைச்சர் டூ 11ஆம் வகுப்பு மாணவன் - ரிவர்சில் திரும்பிய ஆளுங்கட்சி எம்.எல்.ஏ!

ஆனால், இன்று எந்தப் பள்ளிகளிலும் அப்படி இல்லை. இந்த ஆண்டு இருக்கும் அசாதாரண சூழ்நிலையைக் (கொரோனா) கருத்தில் கொண்டு பள்ளிகளில் குழந்தைகளை அழைக்க வேண்டாம் என்று தலைமையாசிரியர்களுக்கு சுற்றறிக்கைகள் அனுப்பப்பட்டுள்ளன. அத்துடன் ஆசிரியர்களையும் அழைக்க வேண்டாம் என்றும் உத்தரவு. சரி என்னதான் செய்ய வேண்டும். வெறுமனே தலைமையாசிரியர்கள் மட்டும்போய் கொடியேற்றிவிட்டு திரும்பி வந்துவிடலாம். குழந்தைகளுக்கும் கொடியேற்றத்துக்கும் தொடர்பில்லை என்றால் பள்ளிகளில் ஏன் கொடியேற்ற வேண்டும்?

சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினத்தின்போது பள்ளிகளில் கொடியேற்றுவதன் நோக்கம் குழந்தைகள் மத்தியில் நாட்டுப்பற்றுக்கும் ஒற்றுமைக்கும் வழிவகுப்பதே. குழந்தைகளையே அழைக்க வேண்டாம் என்ற பிறகு வெறுமனே கொடியேற்றுவதில் பலன் என்ன?



இந்த நாளில் பார்க்குமிடமெங்கும் மூவர்ணக்கொடி பறக்க வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. பள்ளிகளில் கொடியேற்றச் சொன்ன உத்தரவிலும் பிழையில்லை. ஆனால், சுதந்திர தினத்தைப் பள்ளிகளில் கொண்டாடுவதன் நோக்கம் துளியும் நிறைவேறாது எனும்பட்சத்தில், குழந்தைகளை ஈடுபடுத்தும் விதமாக ஏதாவது சிந்தித்திருக்க வேண்டாமா எனும் கேள்வி நம் எல்லோர் முன்பும் நிற்கிறது.

இது குறித்துக் கேட்டப்போது “குறைந்தபட்சம் ஆன்லைன் வழியாக போட்டிகள், சந்திப்புகள் என குழந்தைகளின் பங்கேற்பை உறுதி செய்திருக்கலாம். இதனால் என்ன மாற்றம் வரப்போகிறது என்ற கேள்வி இப்போது எழலாம். ஒரு ஓட்டால் என்ன மாறிவிடப்போகிறது என்ற கேள்விக்கு என்ன பதிலோ அதேதான் இதற்கும் பதில்.

பள்ளிக்காலத்தில் மாணவர்கள் மத்தியில் நிகழ்த்தப்படும் பதிவுகள்தான் அவர்களது பிற்கால வாழ்வின் பிரதிபலிப்புகள். பங்கேற்கும் மாணவர்கள் மட்டுமன்றி பார்வையாளராக இருக்கும் மாணவர்கள் மனதிலும் அந்தப் பதிவுகள் தாக்கம் நிகழ்த்தக் கூடியவை. ஆனால், இந்த ஆண்டு அதற்கான வாய்ப்புகள் ஏதும் அமைக்கப்படவில்லை. இந்த அடிப்படையை மனதில் வைத்துத்தான் சுற்றறிக்கை வெளியாகியிருக்க வேண்டும்” என்கிறார் அரசுப்பள்ளித் தலைமையாசிரியர் ஒருவர்.


தனிப்பட்ட முறையில் ஓரிரு பள்ளிகள் இதனைச் செய்தாலும், அரசு சொல்லியிருந்தால் அது பள்ளிக்கும் குழந்தைகளுக்கும் இடையிலான உறவின் மீது அரசுக்கு இருக்கும் பொறுப்பைக் காட்டியிருக்கும். ஆனால், அரசுக்கு இந்த அடிப்படையின் மீது கவனம் இல்லை. பதிவுகளை ஏற்படுத்தும் பாதையிலிருந்து மாறி, பாழ்மரபை மட்டும் காரணம் காட்டி நடக்கிறது, பள்ளிகளில் இந்த ஆண்டு நடைபெறும் சுதந்திர தின விழா.

மொத்தத்தில் ஆசிரியர்கள் மட்டும் போய் கொடியேற்றுங்கள் என்னும் உத்தரவு, எந்த விதத்திலும் உபயோகமானது அல்ல. வெறுமனே கொடியேற்றம் என்னும் சடங்கு நிகழ்த்தப்பட்டு விட்டது என்ற பதிவை மட்டும் அரசாங்க ஏட்டுக்கு அனுப்பி வைக்கும்

அடுத்த செய்தி