ஆப்நகரம்

ஹீலர் பாஸ்கரைக் கைது செய்தால் போதுமா?

கொரோனா குறித்து தவறாக வழிநடத்த முயன்ற ஹீலர் பாஸ்கர் கைது செய்யப்பட்டுள்ளார். அது போதுமானதா?

Samayam Tamil 20 Mar 2020, 5:28 pm
கொரோனா தானாக சரியாகிவிடும் மருத்துவமனைக்குச் செல்ல வேண்டாம் என்று தெரிவித்த ஹீலர் பாஸ்கர் கைது செய்யப்பட்டுள்ளார்.
Samayam Tamil healer baskar


உலகம் முழுக்க பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருக்கும் கொரோனாவால் இதுவரை 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு ஏறக்குறைய 10,000 பேர் உயிரிழந்துள்ளனர். உலகம் முழுக்க எல்லா அரசுகளும் தடுக்கவும், பாதுகாக்கவும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

அதே சமயம் பலரும் பலவிதமாக வதந்தி பரப்பி வருவதும் தொடர்ந்து வருகிறது. இதனையடுத்து மக்களிடையே வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய, மாநில அரசுகள் எச்சரித்திருந்தனர்.

தமிழகத்தின் பல பகுதிகளிலும் மூன்று நபர்கள் போலியான கொரோனா தகவல்களை பரப்பியதற்காக கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் கொரோனா குறித்து தவறான தகவல்களை பேசி வாட்ஸ் அப் மூலமாக பரப்பிய குற்றத்திற்காக ஹீலர் பாஸ்கரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

இந்தியாவில் பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு

நீண்ட காலமாகவே பொதுவான மருத்துவ முறைகளுக்கு எதிராகத்தான் மக்களிடையே அதிகம் பேசி வருகிறார் என்றபோதும், தற்போது இவர் வெளியிட்டுள்ள ஆடியோவில் கொரோனா என்பது இல்லுமினாட்டி சதி என்றும், அரசின் தடுப்பு ஏற்பாடுகள் போலியானவை என்றும் பேசியிருக்கிறார். அந்த ஆடியோவை கேட்ட அதிகாரிகள் உடனடியாக அவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர்.

கடந்த 2018ம் ஆண்டு பெண்களை வீட்டிலேயே பிரசவம் பார்க்க சொல்லி இவர் வீடியோ வெளியிட்டதற்காக ஏற்கனவே கைது செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

வதந்திகளைப் பரப்பிவருவோரைக் கைது செய்வது, மக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படாதவண்ணம் பார்த்துக்கொள்வது எல்லாம் அரசின் முக்கியமான கடமைகளில் ஒன்றுதான் என்றபோதும் வதந்தி பரவுவதைத் தடுப்பதில் இருக்கும் வேகம் வைரஸ் தொற்றை சோதனை செய்வதில் இல்லையே என்ற வருத்தம் பெரும்பாலானோர்க்கு உண்டு.

விமான நிலையங்களிலும், ரயில் நிலையங்களிலும் எந்தவித சோதனைக்கும் ஆட்படாமல் ஊருக்குள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், வதந்தி பரப்புவோரைக் கைது செய்வதோடு, சோதனைகளையும் சரிவரச் செய்ய வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமும்.

அடுத்த செய்தி