ஆப்நகரம்

மிருகங்களைப் போல நடத்தப்படும் சிறைக் கைதிகள்; உச்சநீதிமன்றம் கண்டனம்!

சிறைக் கைதிகள் நடத்தப்படும் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

Samayam Tamil 31 Mar 2018, 9:19 pm
டெல்லி: சிறைக் கைதிகள் நடத்தப்படும் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
Samayam Tamil Supreme Court
உச்சநீதிமன்றம்


நாடு முழுவதும் உள்ள சிறைச் சாலைகளில் அளவுக்கு அதிகமாக கைதிகள் அடைத்து வைக்கப்படுகின்றனர். இதுகுறித்து வழக்கு ஒன்று உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிமன்றம், சிறைச்சாலை நிலைமைகளை சீராக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாநில, யூனியன் பிரதேச சிறைத்துறை ஐ.ஜிக்கள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

இதற்கான காலக்கெடு நிறைவடைந்த நிலையில், நீதிபதிகள் எம்.பி.லோகுர், தீபக் குப்தா அடங்கிய அமர்வு முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, நாடு முழுவதும் உள்ள சிறைச்சாலைகளில் அதிகப்படியான கைதிகளை அடைத்து வைத்திருப்பதற்கு, அரசு இதுவரை நடவடிக்கை எடுக்காததற்கு கண்டனம் தெரிவித்தது.

கைதிகளை வைத்துக் கொள்ள முடியவில்லை என்றால், வெளியே அனுப்புங்கள். சிறையில் மிருகங்களைப் போல அடைத்து வைக்காதீர்கள் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

2 வாரங்களில் பதிலளிக்க வில்லை என்றால், நீதிமன்ற அவமதிப்பாக எடுத்துக் கொள்ளப்படும் என்று குறிப்பிட்டுள்ளனர்.

Is prisoners are animals, Supreme Court condemns Govts.

அடுத்த செய்தி