ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானியின் மகள் ஈஷா அம்பானிக்கும், ஆனந்த் பிரமல் என்பவருக்கும் திருமணம் நிச்சயக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் தகவல் மேலாண்மை மற்றும் நிதி சேவைகள் துறைகளில் முன்னணி வகிப்பது பிரமல் எண்டர்பிரைசர்ஸ். இந்நிறுவனத்தின் தலைவரான அஜய் பிரமலின் மகன் தான் ஆனந்த் பிரமல்.
ஈஷா அம்பானி மற்றும் ஆன்ந்த் பிரமல் இருவரும் நீண்டகாலமாக நண்பர்கள். ஒரு சினிமா பார்ப்பது போல ஈஷா மீது ஆனந்திற்கு ஒரு கட்டத்தில் காதல் ஏற்பட்டுள்ளது. அதை ஆனந்த் ஈஷாவிட தெரிவிக்க அவரும் காதலை ஏற்றுக்கொண்டுள்ளார்.
இந்த காதல் பற்றிய தகவல்கள் ஊடகங்களில் வெளிவந்திருந்தாலும், ஈஷாவின் சகோதர்களான ஆனந்த் அம்பானி, ஆகாஷ் அம்பானி ஆகியோர்களின் திருமணச்செய்தி வெளியானதில் ஈஷா-ஆன்ந்த் காதல் சற்று மீடியா கண்களில் படமால் இருந்து வந்தது.
ஆனந்த் பிரமல் பென்சில்வேனியா பல்கலைக்கழகம் மற்றும் ஹார்வேர்ட் பிஸ்னஸ் ஸ்கூலில் பட்டம் பெற்றவர். இந்திய வணிகர் சேம்பர் - இளைஞர் பிரிவிற்கு இவர் தலைமை பொறுப்பும் ஏற்றுள்ளார்.
பிரமல் எண்டர்பிரைசஸ் நிறுவனத்தை தற்போது ஆனந்த் பிரமல் நிர்வகிக்க தொடங்கியுள்ளார். அவரது வருகைக்கு பிறகு அந்நிறுவனம் தற்போது மருந்துகள் தயாரிப்பு மற்றும் ரியல் எஸ்டேட் துறைகளில் கால்பதித்துள்ளது.
ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ரிலையன்ஸ் ரீடெயில் நிறுவனங்களை தற்போது ஈஷா அம்பானி தான் நிர்வகித்து வருகிறார். யேல் பல்கலைக்கழகத்தில் உளவியல் துறையில் பட்டம் பெற்றுள்ள ஈஷா அம்பானி, தற்போது ஸ்டேன்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் வணிக துறையில் பட்டப்படிப்பு படித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
ஈஷாவின் இளைய சகோதரரான ஆகாஷ் அம்பானி மற்றும் ஷோலா மேத்தா என்பவருக்கும் கடந்த மார்ச் 24ம் தேதி திருமணம் நிச்சயக்கப்பட்டது. இந்நிலையில் அவரது சகோதிரி ஈஷா அம்பானி மற்றும் ஆனந்த் பிரமல்லிற்கு திருமணம் நிச்சியக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இவர்களது திருமணம் 2018 டிசம்பர் மாதத்தில் நடைபெறும் என அம்பானி குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இதை தொடர்ந்து ஈஷா அம்பானி மற்றும் ஆனந்த் பிரமல் ஜோடிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.
தொடர்ந்து இன்று காலை 8.30 மணியளவில் மும்பையில் உள்ள எஸ்கான் கோவிலுக்கு அம்பானி குடும்பத்தினருடன், ஆன்ந்த பிரமல் குடும்பத்தினரும் இணைந்து சாமி தரிசனம் செய்துள்ளனர். அதற்கான புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் பரவலாக காணப்படுகின்றன.
இந்தியாவில் தகவல் மேலாண்மை மற்றும் நிதி சேவைகள் துறைகளில் முன்னணி வகிப்பது பிரமல் எண்டர்பிரைசர்ஸ். இந்நிறுவனத்தின் தலைவரான அஜய் பிரமலின் மகன் தான் ஆனந்த் பிரமல்.
ஈஷா அம்பானி மற்றும் ஆன்ந்த் பிரமல் இருவரும் நீண்டகாலமாக நண்பர்கள். ஒரு சினிமா பார்ப்பது போல ஈஷா மீது ஆனந்திற்கு ஒரு கட்டத்தில் காதல் ஏற்பட்டுள்ளது. அதை ஆனந்த் ஈஷாவிட தெரிவிக்க அவரும் காதலை ஏற்றுக்கொண்டுள்ளார்.
இந்த காதல் பற்றிய தகவல்கள் ஊடகங்களில் வெளிவந்திருந்தாலும், ஈஷாவின் சகோதர்களான ஆனந்த் அம்பானி, ஆகாஷ் அம்பானி ஆகியோர்களின் திருமணச்செய்தி வெளியானதில் ஈஷா-ஆன்ந்த் காதல் சற்று மீடியா கண்களில் படமால் இருந்து வந்தது.
ஆனந்த் பிரமல் பென்சில்வேனியா பல்கலைக்கழகம் மற்றும் ஹார்வேர்ட் பிஸ்னஸ் ஸ்கூலில் பட்டம் பெற்றவர். இந்திய வணிகர் சேம்பர் - இளைஞர் பிரிவிற்கு இவர் தலைமை பொறுப்பும் ஏற்றுள்ளார்.
பிரமல் எண்டர்பிரைசஸ் நிறுவனத்தை தற்போது ஆனந்த் பிரமல் நிர்வகிக்க தொடங்கியுள்ளார். அவரது வருகைக்கு பிறகு அந்நிறுவனம் தற்போது மருந்துகள் தயாரிப்பு மற்றும் ரியல் எஸ்டேட் துறைகளில் கால்பதித்துள்ளது.
ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ரிலையன்ஸ் ரீடெயில் நிறுவனங்களை தற்போது ஈஷா அம்பானி தான் நிர்வகித்து வருகிறார். யேல் பல்கலைக்கழகத்தில் உளவியல் துறையில் பட்டம் பெற்றுள்ள ஈஷா அம்பானி, தற்போது ஸ்டேன்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் வணிக துறையில் பட்டப்படிப்பு படித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
ஈஷாவின் இளைய சகோதரரான ஆகாஷ் அம்பானி மற்றும் ஷோலா மேத்தா என்பவருக்கும் கடந்த மார்ச் 24ம் தேதி திருமணம் நிச்சயக்கப்பட்டது. இந்நிலையில் அவரது சகோதிரி ஈஷா அம்பானி மற்றும் ஆனந்த் பிரமல்லிற்கு திருமணம் நிச்சியக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இவர்களது திருமணம் 2018 டிசம்பர் மாதத்தில் நடைபெறும் என அம்பானி குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இதை தொடர்ந்து ஈஷா அம்பானி மற்றும் ஆனந்த் பிரமல் ஜோடிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.
தொடர்ந்து இன்று காலை 8.30 மணியளவில் மும்பையில் உள்ள எஸ்கான் கோவிலுக்கு அம்பானி குடும்பத்தினருடன், ஆன்ந்த பிரமல் குடும்பத்தினரும் இணைந்து சாமி தரிசனம் செய்துள்ளனர். அதற்கான புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் பரவலாக காணப்படுகின்றன.