ஆப்நகரம்

15 ஆண்டுகளுக்குப் பிறகு இஸ்ரேல் பிரதமர் இந்தியா வருகை!

அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவை பிரதமர் மோடி நேரில் சென்று வரவேற்றார்.

Samayam Tamil 14 Jan 2018, 1:36 pm
அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவை பிரதமர் மோடி நேரில் சென்று வரவேற்றார்.
Samayam Tamil israeli pm netanyahu to arrive in delhi today
15 ஆண்டுகளுக்குப் பிறகு இஸ்ரேல் பிரதமர் இந்தியா வருகை!


இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு 6 நாள் அரசு முறை பயணமாக இந்தியாவுக்கு வருகை புரிந்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்ற பின் இந்தியா இஸ்ரேல் இடையேயான உறவு வலுவடைந்துள்ளது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் பிரதமர் மோடி இஸ்ரேல் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது பிரதமர் மோடியின் இந்திய அழைப்பை ஏற்று, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இந்தியாவுக்கு வருகை புரிந்துள்ளார்.

டெல்லி ஆக்ரா, அகதமாபாத் மற்றும் மும்பை நகரங்களுக்கும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு, பிரதமர் மோடியையும், ஜனாதிபதி கோவிந்தையும் சந்தித்து பேசுகிறார். இந்த சந்திப்பில் 1700 கோடி ரூபாய் மதிப்பில் பல்வேறு துறைகளில் ஒப்பந்தகள் கையெழுத்தாக உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

சுமார் 15 ஆண்டுகளுக்குப் பின்னர் இஸ்ரேல் பிரதமர் ஒருவர் இந்தியா வருவது அரசியல் உலகில் முக்கியமாக பார்க்கப்படுகிறது. கடைசியாக 2003ஆம் ஆண்டு அப்போதைய இஸ்ரேல் பிரதமர் ஏரியல் ஷரோன் இந்தியா வந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி