ஆப்நகரம்

Chandrayaan 2: விண்ணில் ஏவுவதற்கான ஏற்பாடுகள் தீவிரம்!

வரும் 15ம் தேதி சந்திரயான் 2 விண்கலம் விண்ணில் செலுத்தப்பட உள்ள நிலையில், இஸ்ரோ விஞ்ஞானிகள் அதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

Samayam Tamil 12 Jul 2019, 1:01 pm
சந்திரயான் 2 விண்கலம் விண்ணில் செலுத்துவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஏவுதல் நிகழ்வை நேரில் பார்வையிடுவற்காக குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த ஸ்ரீஹரிகோட்டா வருகிறார்.
Samayam Tamil chandrayaan 2 1


இஸ்ரோ நிறுவனம் தயாரித்துள்ள சந்திரயான் 2 விண்கலம் வரும் 15ம் தேதி ஜி.எஸ்.எல்.வி மார்க் III ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்படுகிறது. இந்நிலையில், சந்திரயான் 2 விண்கலத்தை விண்ணில் ஏவுவதற்கான ஏவுதளப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. ஜி.எஸ்.எல்.வி ராக்கெட்டுக்கான இயந்திரங்கள், ஏவு கருவிகள் தயார்ப்படுத்தப்பட்டுள்ளன. தொழில்நுட்ப கோளாறு ஏற்படாத வகையில் அனைத்து கருவிகளும் பலமுறை சோனை செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2008ம் ஆண்டு சந்திரயான் 1 விண்கலம் வெற்றிகரமாக நிலவில் தரையிறக்கப்பட்டது. இதனால் விண்வெளித்துறையில் உலக அரங்கில் மிகப்பெரிய சரித்திரம் படைத்தது. இதையடுத்து கிட்டத்தட்ட 10 வருடங்களுக்குப் பிறகு தற்போது சந்திரயான் 2 விண்கலம் செலுத்தப்படுகிறது. சந்திரயான் 2 ஏவுதல் நிகழ்வை நேரில் பார்வையிடுவதற்காக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தனது குடும்பத்துடன் ஸ்ரீஹரிகோட்டா வரவுள்ளார். அப்துல்கலாம், பிரணாப் முகர்ஜி ஆகியோருக்கு அடுத்து ராக்கெட் ஏவுதலை நேரில் பார்க்க வரும் இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஆவார்.

சந்திரயான்-2 ஏவுதல் நிகழ்வை, ஸ்ரீஹரிகோட்டாவில் நேரடியாக அருகில் இருந்து பார்ப்பதற்கு பொதுமக்களுக்கும் வாய்ப்பு வழங்கப்படுகிறது. இதற்கான முன்பதிவு கடந்த வாரம் நடைபெற்றது. ராக்கெட் ஏவுதல் நிகழ்வை பார்ப்பதற்காக ஸ்ரீஹரிகோட்டாவில் பிரத்யேகமாக அரங்கு அமைக்கப்பட்டுள்ளது. இது தவிர தூர்தர்ஷன், இஸ்ரோ இணையதளம் ஆகியவற்றில் நேரலை ஒளிபரப்பும் செய்யப்படுகிறது.

அடுத்த செய்தி