ஆப்நகரம்

இஸ்ரோ சாதனை; மணற்சிற்பம் வரைந்த சுதர்ஷன் பட்நாயக்!

ஜிசாட் 6ஏ செயற்கைக்கோள் -- ஜிஎஸ்எல்வி F08 ராக்கெட், இன்று வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டதற்கு வாழ்த்தும் விதமாக பிரபல மணற்சிற்ப கலைஞர் சுதர்ஷன் பட்நாயக் மணற்சிற்பம் வரைந்துள்ளார்.

Samayam Tamil 29 Mar 2018, 8:40 pm
ஜிசாட் 6ஏ செயற்கைக்கோள் -- ஜிஎஸ்எல்வி F0 8 ராக்கெட், இன்று வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டதற்கு வாழ்த்தும் விதமாக பிரபல மணற்சிற்ப கலைஞர் சுதர்ஷன் பட்நாயக் மணற்சிற்பம் வரைந்துள்ளார்.
Samayam Tamil isro sand art


தொலைத்தொடர்புக்கு பயன்படும் ஜிசாட் 6ஏ செயற்கைக்கோள் -- ஜிஎஸ்எல்வி F08 ராக்கெட், இன்று வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.
முன்னதாக இஸ்ரோ தலைவர் கே.சிவன், மற்றும் அதிகாரிகள் ராக்கெட் ஏவுதல் கட்டுப்பாட்டு அறைக்கு சென்று, ஏற்பாடுகளை பார்வையிட்டனர். இந்த ராக்கெட் ஏவுவதற்கான 27 மணி நேர கவுண்டவுன் நேற்று தொடங்கப்பட்டது. சரியாக மாலை 4.56 மணிக்கு ராக்கெட் ஏவும்படி கவுண்டவுன் செட் செய்யப்பட்டது.
அதன்படி, ஆந்திரா மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள விண்வெளி ஆய்வு மையத்தின் இரண்டாவது ஏவுதளத்தில் இருந்து மாலை 4.56 மணிக்கு விண்ணில் சீறிப்பாய்நதது.

தகவல் தொலைத் தொடர்புக்கு பயன்படும் வகையில், உருவாக்கப்பட்ட ஜிசாட் – 6ஏ செயற்கைக்கோள், கிரியோஜினிக் தொழில்நுட்பத்தில் முழுக்க முழுக்க இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 6 வரது செயற்கைக்கோளாகும் இதே போல், இதை சுமந்து செல்லும் ராக்கெட், ஜிஎஸ்எல்வி வரிசையில் இந்தியாவின் 12 வது ராக்கெட் ஆகும்.

இந்நிலையில், இஸ்ரோவின் இந்த சாதனையை பாராட்டும் வகையில், பிரபல மணற்சிற்ப கலைஞர் சுதர்ஷன் பட்நாயக், ஓடிசா கடற்கரையில், இஸ்ரோவின் சாதனையை மணற்சிற்பமாக வரைந்துள்ளார்.

அடுத்த செய்தி