லக்னோ: மகன், பணம், குடும்பம் இவைதான் இதுவரை உத்திரப் பிரதேசத்தை ஆண்ட கட்சிகளின் லட்சணம் என்றும் பாஜக ஆட்சியில் இல்லாத போது மாநிலத்தின் வளர்ச்சியும் இல்லாமல் போனது என்றும் பிரதமர் நரேந்திர மோடி அறுதியிட்டுக் கூறியுள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலத்தில் எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு லக்னோவில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி உத்தரப் பிரதேசத்தில் பாஜக இல்லாத 14 ஆண்டு காலத்தில் வளர்ச்சியும் இல்லாமல் போய்விட்டது என்று அறுதியிட்டுக் கூறினார்.
PM @narendramodi hits Congress, BSP and SP#ModiInUP pic.twitter.com/SzzMd5ULSE — Times of India (@timesofindia) January 2, 2017 மேலும் பேசிய அவர், உத்தரப் பிரதேசத்தை வளர்ச்சிப் பாதையில் மீட்கும் ஒரே கட்சி பாஜக தான். எதிரும் புதிருமான பகுஜன் சமாஜ் கட்சியும் சமாஜ்வாதிக் கட்சியும் கருப்புப் பணத்தை ஒழிக்க மத்திய அரசு எடுத்துள்ள முடிவை எதிர்ப்பதில் மட்டும் ஒன்று சேர்ந்துகொள்கின்றன. மகன், பணம், குடும்பம் இவை தான் இதுவரை உத்தரப் பிரதேசத்தை ஆட்சி செய்த கட்சிகளின் லட்சணம்.
Despite full support from the Centre, #UP govt has no time to purchase paddy from farmers, alleges PM @narendramodi. — Press Trust of India (@PTI_News) January 2, 2017 14 ஆண்டுகள் உத்தரப் பிரதேசத்தில் பாஜக ஆட்சிக்கு வரவில்லை என்று பேசுகிறார்கள். ஆனால், 14 ஆண்டுகளாக மாநிலத்தில் வளர்ச்சியும் ஏற்படவில்லையே. ஆளூம் சமாஜவாதிக் கட்சி, மத்திய அரசு முழு ஆதரவு அளித்த போதும் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்தவதற்கு நேரமில்லாமல் இருக்கிறது.
உத்தரப் பிரதேச மாநிலத்தில் எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு லக்னோவில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி உத்தரப் பிரதேசத்தில் பாஜக இல்லாத 14 ஆண்டு காலத்தில் வளர்ச்சியும் இல்லாமல் போய்விட்டது என்று அறுதியிட்டுக் கூறினார்.
PM @narendramodi hits Congress, BSP and SP#ModiInUP pic.twitter.com/SzzMd5ULSE — Times of India (@timesofindia) January 2, 2017 மேலும் பேசிய அவர், உத்தரப் பிரதேசத்தை வளர்ச்சிப் பாதையில் மீட்கும் ஒரே கட்சி பாஜக தான். எதிரும் புதிருமான பகுஜன் சமாஜ் கட்சியும் சமாஜ்வாதிக் கட்சியும் கருப்புப் பணத்தை ஒழிக்க மத்திய அரசு எடுத்துள்ள முடிவை எதிர்ப்பதில் மட்டும் ஒன்று சேர்ந்துகொள்கின்றன. மகன், பணம், குடும்பம் இவை தான் இதுவரை உத்தரப் பிரதேசத்தை ஆட்சி செய்த கட்சிகளின் லட்சணம்.
Despite full support from the Centre, #UP govt has no time to purchase paddy from farmers, alleges PM @narendramodi. — Press Trust of India (@PTI_News) January 2, 2017 14 ஆண்டுகள் உத்தரப் பிரதேசத்தில் பாஜக ஆட்சிக்கு வரவில்லை என்று பேசுகிறார்கள். ஆனால், 14 ஆண்டுகளாக மாநிலத்தில் வளர்ச்சியும் ஏற்படவில்லையே. ஆளூம் சமாஜவாதிக் கட்சி, மத்திய அரசு முழு ஆதரவு அளித்த போதும் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்தவதற்கு நேரமில்லாமல் இருக்கிறது.