ஆப்நகரம்

பெரிய தொகையை டெபாசிட் செய்த 5100 பேருக்கு வருமானவரித்துறை நோட்டீஸ்

மத்திய அரசின் பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பிறகு பெரிய தொகையை வங்கியில் டெபாசிட் செய்த 5100 பேருக்கு வருமானவரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

TNN 15 Mar 2017, 8:03 pm
டெல்லி: மத்திய அரசின் பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பிறகு பெரிய தொகையை வங்கியில் டெபாசிட் செய்த 5100 பேருக்கு வருமானவரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
Samayam Tamil it issues 5100 notices for suspicious post demonetisation deposits
பெரிய தொகையை டெபாசிட் செய்த 5100 பேருக்கு வருமானவரித்துறை நோட்டீஸ்


மத்திய அரசு கடந்த ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று அறிவித்தது. இதற்குப் பிறகு, நாடு முழுவதும் பல இடங்களில் வருமானவரித்துறையினர் நடத்திய சோதனையில் கட்டுக்கட்டாக கணக்கில் வராத பணம் சிக்கி வருகிறது.

இதுகுறித்து இன்று நடைபெற்ற நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் பேசிய மத்திய நிதித்துறை இணை அமைச்சர் சந்தோஷ் குமார் கங்வார், வருமான வரித்துறையின் சோதனையில் இதுவரை 610 கோடி ரூபாய் மதிப்பலான பொருட்கள், 513 கோடி ரூபாய் ரொக்கப்பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும், 5400 கோடி ரூபாய் அளவிற்கு பணம் கணக்கில் வராத பணம் வைத்திருக்கும் 5100 பேருக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியள்ளது என்று தெரிவித்தார்.

அடுத்த செய்தி