தகவல் தொழில்நுட்பத்துறையில் இந்தியர்களின் திறமையை பயன்படுத்துவதே நாளைய இந்தியாவை உருவாக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார்.
தலைநகர் டெல்லியில் உள்ள விக்யான் பவனில் நீதிமன்றங்களை டிஜிட்டல்மயமாக்குவது குறித்த கருத்தரங்கத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கிவைத்தார். மேலும், உச்சநீதிமன்றத்தின் இணையதளத்தையும் தொடங்கிவைத்து சிறப்புரையாற்றினார்.
அப்போது, எதிர்கால இந்தியாவை உருவாக்குவது தகவல் தொழில்நுட்பத்துறையில் இந்தியர்கள் திறமையைக் காட்டுவதுதான் என்று பிரதமர் கூறினார். மேலும், “தொழில்நுட்பத்தை ஏற்றுக்கொள்வது தொடர் முயற்சியாலேயே சாத்தியமாகும். அதற்கான முயற்சி விரிவானதாக இருக்க வேண்டும். , குறிப்பாக, தொழில்நுட்பத்திற்கு நாட்டின் பொருளாதார நிலையை மாற்றும் சக்தி உண்டு” என்றும் அவர் தெரிவித்தார்.
#Breaking: Integrated Case Management Information System uploaded. #DigitalSupremeCourt — Bar & Bench (@barandbench) May 10, 2017 “மின் ஆளுகை எளிமையானது, பயனுள்ளது மற்றும் சிக்கனமானது. மேலும், சுற்றுச்சூழலுக்கும் தீங்குவிளைவிக்காதது. காகிதமில்லாத அலுவலகங்கள் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு துணைநிற்பதாகும்” என்றும் பிரதமர் தனது உரையில் வலியுறுத்தினார்.
Technology has the power to transform our economic potential as well: PM @narendramodi — PMO India (@PMOIndia) May 10, 2017 இந்த நிகழ்வில் மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ஜெ.எஸ்.கெஹர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
தலைநகர் டெல்லியில் உள்ள விக்யான் பவனில் நீதிமன்றங்களை டிஜிட்டல்மயமாக்குவது குறித்த கருத்தரங்கத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கிவைத்தார். மேலும், உச்சநீதிமன்றத்தின் இணையதளத்தையும் தொடங்கிவைத்து சிறப்புரையாற்றினார்.
அப்போது, எதிர்கால இந்தியாவை உருவாக்குவது தகவல் தொழில்நுட்பத்துறையில் இந்தியர்கள் திறமையைக் காட்டுவதுதான் என்று பிரதமர் கூறினார். மேலும், “தொழில்நுட்பத்தை ஏற்றுக்கொள்வது தொடர் முயற்சியாலேயே சாத்தியமாகும். அதற்கான முயற்சி விரிவானதாக இருக்க வேண்டும். , குறிப்பாக, தொழில்நுட்பத்திற்கு நாட்டின் பொருளாதார நிலையை மாற்றும் சக்தி உண்டு” என்றும் அவர் தெரிவித்தார்.
#Breaking: Integrated Case Management Information System uploaded. #DigitalSupremeCourt — Bar & Bench (@barandbench) May 10, 2017 “மின் ஆளுகை எளிமையானது, பயனுள்ளது மற்றும் சிக்கனமானது. மேலும், சுற்றுச்சூழலுக்கும் தீங்குவிளைவிக்காதது. காகிதமில்லாத அலுவலகங்கள் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு துணைநிற்பதாகும்” என்றும் பிரதமர் தனது உரையில் வலியுறுத்தினார்.
Technology has the power to transform our economic potential as well: PM @narendramodi — PMO India (@PMOIndia) May 10, 2017 இந்த நிகழ்வில் மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ஜெ.எஸ்.கெஹர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.