ஆப்நகரம்

கேரள வெள்ளத்தில் சிக்கிய பனிக்குடம் உடைந்த கர்ப்பிணி ஹெலிகாப்டர் மூலம் மீட்பு - வீடியோ!

பனிக்குடம் உடைந்த கர்ப்பிணி மீட்கப்பட்டு, பிரசவம் பார்க்கப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.

Samayam Tamil 18 Aug 2018, 10:15 am
கொச்சின்: பனிக்குடம் உடைந்த கர்ப்பிணி மீட்கப்பட்டு, பிரசவம் பார்க்கப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.
Samayam Tamil Navy Rescue


கேரள மாநிலத்தில் வரலாறு காணாத மழை பெய்து வருகிறது. அனைத்து அணைகளும் நிரம்பி, வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் லட்சக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை இழந்து தவிக்கின்றனர்.

வெள்ளத்தின் நடுவே சிக்கிக் கொண்டவர்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்பு படை மற்றும் ராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர். ஏராளமானோர் உணவின்றி வெள்ளத்தில் சிக்கியுள்ளனர்.

அவர்களை மீட்க தீவிர முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் பனிக்குடம் உடைந்த கர்ப்பிணி ஒருவர், ஆலுவா பகுதி வெள்ளத்தில் சிக்கிக் கொண்டார். அவரை மீட்க பேரிடர் மீட்பு குழுவினர் விரைந்தனர்.

ஹெலிகாப்டரில் இருந்து கயிறு கட்டி கர்ப்பிணியை மேலே தூக்கினர். பின்னர் அவரை அருகில் உள்ள சஞ்ஜிவினி நகர் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளது.

தற்போது தாயும், சேயும் நலமாக இருக்கின்றனர். இதுதொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்களை கடற்படையினர் தங்கள் டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர்.

It's safe delivery as Navy airlifts pregnant woman in Kerala floods.

அடுத்த செய்தி