ஆப்நகரம்

சிறப்பு மாநில அந்தஸ்து:போராட்டத்திற்கு ஒய்.எஸ் ஆர் காங்கிரஸ் கட்சி அழைப்பு

ஆந்திராவுக்கு சிறப்பு மாநில அந்தஸ்து வழங்கக் கோரி, வரும் ஆகஸ்ட் 2-ஆம் தேதி மிகப்பெரிய போரட்டத்திற்கு ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுத்துள்ளது.

TNN 31 Jul 2016, 4:26 am
ஆந்திராவுக்கு சிறப்பு மாநில அந்தஸ்து வழங்கக் கோரி, வரும் ஆகஸ்ட் 2-ஆம் தேதி மிகப்பெரிய போரட்டத்திற்கு ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுத்துள்ளது.
Samayam Tamil jagan mohan reddy calls for protest over special status issue
சிறப்பு மாநில அந்தஸ்து:போராட்டத்திற்கு ஒய்.எஸ் ஆர் காங்கிரஸ் கட்சி அழைப்பு


இது குறித்து ஹைதராபாத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஒய்.எஸ்.ஆர் கட்சி தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி,”ஆந்திராவுக்கு சிறப்பு மாநில அந்தஸ்து கிடைக்க வேண்டும் என நினைக்கும் ஒவ்வொருவரும் இந்த போராட்டத்தில் திரளாக வந்து கலந்து கொள்ள வேண்டும்.இந்த போராட்டம் மூலமாக ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்க கோரி மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுப்போம்.சிறப்பு அந்தஸ்து பெற்று தருவதாக வாக்குறுதி அளித்து வாக்குகளை பெற்ற சந்திரபாபு நாயுடு,ஊழலில் மூழ்கித் திளைக்கிறார்.ஊழல் வழக்குகளிலிருந்து விடுபட மத்தியில் உள்ள பாஜக அரசின் துணை வேண்டும்.எனவேதான் சிறப்பு அந்தஸ்து குறித்து வாய் திறக்க மறுக்கிறார்.”என கடுமையாக பேசினார்.

ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலம் பிரிக்கப்பட்ட போதே,ஆந்திராவுக்கு சிறப்பு மாநில அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.இதை முக்கிய பிரச்சார யுக்தியாக சமீபத்தில் நடந்த தேர்தலின் போது சந்திரபாபு நாயுடு பயன்படுத்தி,ஆட்சியையும் பிடித்தார்.ஆனால் சிறப்பு அந்தஸ்து வழங்குவது தொடர்பாக ஆந்திர மறுசீரமைப்பு சட்டத்தில் வாக்குறுதி எதுவும் அளிக்கப்படவில்லை என மத்திய அரசு சமீபத்தில் தெரிவித்துள்ளது அம்மாநில மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி