ஆப்நகரம்

இரண்டு வருட தேடலுக்கு பிறகு கிடைக்காத இந்தியாவின் பெரிய புலி ஜெய்!

இந்தியாவின் பெரிய புலியான ஜெய் உயிருடன் இருக்க சத்தியமில்லை என்று இரண்டு ஆண்டு தேடலுக்குப் பிறகு நாக்பூர் வன ஆய்வாளர்கள் தகவல் தொிவித்துள்ளனர்.

Samayam Tamil 10 May 2018, 5:17 pm
இந்தியாவின் பெரிய புலியான ஜெய் உயிருடன் இருக்க சத்தியமில்லை என்று இரண்டு ஆண்டு தேடலுக்குப் பிறகு நாக்பூர் வன ஆய்வாளர்கள் தகவல் தொிவித்துள்ளனர்.
Samayam Tamil 25502_fullimage_machli foto nat geo wild aditya singh


மகாராஷ்டிரா மாநிலம், நாக்பூரில் உள்ளது உம்ரெட் கர்ஹன்ட்லா வன விலங்கு சரணாலயம். 2013 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த விலங்குகள் நல சரணாலயம் சுமர் 182 கி.மீட்டர் சுற்றளவுகொண்டது. ஜெய் எனப் பெயர் சூட்டப்பட்ட இந்தியாவின் மிகப் பெரிய புலி அங்கு பராமரிக்கப்பட்டு வந்தது 250 கிலோ எடையுடன் நீளத்திலும் அகலத்திலும் பிரமாண்ட தோற்றத்தையும்ஜெய் கொண்டது. கடந்த 2016 ஆம்ஆண்டில் ஏழு வயதைக் கடந்த இந்தப் புலியை, பிரத்யேகமாக கவனித்துவந்தனர் வனத்துறை அதிகாரிகள்.

புலிகள் எந்த இடத்தில் இருக்கிறது என்பதை கண்காணிக்க, `ரேடியோ காலர் சிக்னல்'பயன்படுத்தினர். இந்நிலையில், கடந்த 2016-ம் ஆண்டு ஜெய் காணாமல்போனது.

ரேடியோ காலர் சிக்னல் இணைப்பும் துண்டிக்கப்பட்டது. காணாமல் போன நான்கு மாதங்களுக்குப் பிறகு,கடைசியாக ஜெய் சுற்றித் திரிந்த பகுதியில், சில வேட்டைக்காரர்கள் கைது செய்யப்பட்டனர். ஜெய்யை பணத்துக்காகக் கொலைசெய்துவிட்டனர் என்றசெய்திகள்பொதுமக்கள் மத்தியில் பரவியது.

இதை மறுத்த வன அதிகாரிகள், ஜெய் உயிருடன் இருப்பதாகவே தெரிவித்துவந்தனர். கடைசியாக, 2016 ஆம் ஆண்டு ஏப்ரல் 18-ம் தேதி, பயோனி பகுதியில், ஜெய்யிடமிருந்து சிக்னல் கிடைத்ததாக கூறப்படுகிறது. அதன்பின், எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. இந்த நிலையில், இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு 'ஜெய் உயிரிழந்திருக்கலாம் அதற்கான வாய்ப்புகள் அதிகம்' என வன ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அடுத்த செய்தி