ஆப்நகரம்

இனி சரக்கடிச்சு வண்டி ஓட்டுவ? ஜெயிலுக்கு கூட்டிப் போக காத்திருக்கும் போலீசார்!

மது அருந்தி வாகனம் ஓட்டினால், சிறை தண்டனை விதிக்கப்படும் என்று போலீசார் எச்சரித்துள்ளனர்.

TNN 25 Sep 2017, 8:59 am
சென்னை: மது அருந்தி வாகனம் ஓட்டினால், சிறை தண்டனை விதிக்கப்படும் என்று போலீசார் எச்சரித்துள்ளனர்.
Samayam Tamil jail for drunk and drive says traffic police
இனி சரக்கடிச்சு வண்டி ஓட்டுவ? ஜெயிலுக்கு கூட்டிப் போக காத்திருக்கும் போலீசார்!


போக்குவரத்து விதிமுறைகளை தீவிரமாக கடைபிடிக்கச் செய்ய பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இருப்பினும் விதிமீறல்களால் விபத்துக்கள் வரை நீண்டு விடுகின்றன.

அவ்வாறு குற்றச்செயலில் ஈடுபடுபவர்களிடம் அபராதம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில்,

* போதையில் வாகனம் ஓட்டுதல்

* அதிவேகப் பயணம்

* அதிக பாரம் ஏற்றிச் செல்லுதல்

* சிக்னல்களில் விதிமீறல்

உள்ளிட்ட 6 வகையான குற்றச்செயலில் ஈடுபடுவோரின், ஓட்டுநர் உரிமத்தை தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ ரத்து செய்ய சாலை பாதுகாப்புக்கான உச்சநீதிமன்ற குழு அறிவுறுத்தி உள்ளது.

நடப்பாண்டில் மட்டும் இதுவரை 14 லட்சம் வழக்குகள் போக்குவரத்து விதிமீறல்களால் தொடரப்பட்டுள்ளன. இதன்மூலம் ரூ.16 கோடி அளவிற்கு அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் போதையில் வாகனம் ஓட்டினால் 15 நாட்கள் சிறை தண்டனை விதிக்கும் வகையில், வழக்குப்பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளதாக போக்குவரத்து காவல்துறை உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Jail for drunk and drive says Traffic Police.

அடுத்த செய்தி