ஆப்நகரம்

82 வயதில் ஜெயிலில் பள்ளிப்படிப்பை முடித்த ஹரியானா முன்னாள் முதல்வர்

ஹரியானா மாநிலத்தின் முன்னாள் முதல்வர் ஓம் பிரகாஷ் சவுதாலா 82 வயதில் சிறையில் இருந்தபடியே 12ஆம் வகுப்புத் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார்.

TNN 17 May 2017, 4:52 pm
ஹரியானா மாநிலத்தின் முன்னாள் முதல்வர் ஓம் பிரகாஷ் சவுதாலா 82 வயதில் சிறையில் இருந்தபடியே 12ஆம் வகுப்புத் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார்.
Samayam Tamil jailed ex haryana cm om prakash chautala aces class 12 board exam at 82
82 வயதில் ஜெயிலில் பள்ளிப்படிப்பை முடித்த ஹரியானா முன்னாள் முதல்வர்


ஹரியானா மாநிலத்தின் முன்னாள் முதல்வரும் தேசிய லோக் தளம் கட்சியின் தலைவருமான ஓம் பிரகாஷ் கடந்த 2000ஆம் ஆண்டு சவுதாலா இளநிலை பயிற்சி ஆசிரியர் நியமன ஊழல் குற்றச்சாட்டில் சிக்கினார். 2013ஆம் ஆண்டு வரை இழுத்தடிக்கப்பட்ட இவ்வழக்கில் விசாரணை நீதிமன்றம் சுவுதாலாவுக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது. பின்னர், மேல்முறையீடு செய்யப்பட்டபோது உச்சநீதிமன்றமும் சவுதாலாவுக்கு அளிக்கப்பட்ட தண்டனையை உறுதிசெய்தது.

திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவர் இந்த ஆண்டு 12ஆம் வகுப்பு தேர்வை சிறையில் இருந்தபடியே எழுதி தேர்ச்சி பெற்றுள்ளார். தொடர்ந்து அவரை சிறையிலேயே முடிப்பதற்கு ஆவலாக இருப்பதாகக் கூறியுள்ளார்.

அடுத்த செய்தி