ஆப்நகரம்

பாஜக தலைவர், தந்தை, சகோதரர் சுட்டுக் கொலை - மிஸ்ஸான பாதுகாவலர்கள்; அதிர்ச்சியூட்டிய பயங்கரவாதிகள்!

பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பாஜக தலைவர் தனது குடும்ப உறுப்பினர்களுடன் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 9 Jul 2020, 8:56 am
ஜம்மு காஷ்மீரில் உள்ள பாண்டிபோரா மாவட்டத்தில் பாண்டிபோரா காவல் நிலையத்திற்கு அருகே பாஜக தலைவர் ஷேக் வசீம் பாரி என்பவர் கடை ஒன்றை நடத்தி வருகிறார். நேற்று இரவு 9 மணியளவில் ஷேக் வசீம், அவரது சகோதரர் உமர், தந்தை பஷீர் அகமது ஆகியோர் கடைக்கு வெளியே நின்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த பயங்கரவாதிகள் மூன்று பேரையும் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றனர். இதனால் படுகாயமடைந்த மூன்று பேரும் பாண்டிபோரா மாவட்ட மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். ஆனால் வழியிலேயே மூவரும் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
Samayam Tamil BJP Leader shot dead in Kashmir


இந்த சம்பவம் ஜம்மு காஷ்மீரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றது. இதுபற்றி காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பாஜக தலைவர் ஷேக் வசீமின் பாதுகாப்பிற்கு 8 தனிப்படை பாதுகாவலர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர்.

யார் இந்த ஸ்வப்னா? கேரளாவை அதிரவைத்த தங்கக் கடத்தல் சம்பவத்தின் பின்னணி!

ஆனால் துப்பாக்கிச்சூடு நிகழ்ந்த போது 8 பேரும் அவருடன் இல்லை என்பது அதிர்ச்சியளிக்கிறது. இது பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது. இந்த சூழலில் சம்பந்தப்பட்ட பாதுகாவலர்களையும் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் அவர்களிடம் விசாரணை நடத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. நடந்த சம்பவம் குறித்து பிரதமர் மோடி தொலைபேசியில் கேட்டறிந்ததாக மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார். மேலும் தனது ஆழ்ந்த இரங்கலை அவர்களது குடும்பத்திற்கு தெரிவித்ததாக குறிப்பிட்டுள்ளார்.

இதுபற்றி பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தனது ட்விட்டரில், மூன்று பேரின் மரணம் எங்கள் கட்சிக்கு மிகப்பெரிய இழப்பு. அவர்களது குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். எங்கள் ஒட்டுமொத்த கட்சியும் பாதிக்கப்பட்ட குடும்பத்துடன் கைகோர்த்து நிற்கிறது.

மாவோயிஸ்ட்களை விரட்டிச் சென்று மீட்பு; போலீசார் குடும்பத்திற்காக ஒன்றுதிரண்ட மக்கள்!

இவர்களது தியாகம் வீண்போகாது என்று குறிப்பிட்டுள்ளார். ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் உமர் அப்துல்லா தனது ட்விட்டர் பக்கத்தில், பாஜக நிர்வாகிகள் மீதான கொலைவெறி தாக்குதல் அதிர்ச்சி அளிக்கிறது.

இந்த சம்பவத்தை வன்மையாக கண்டிக்கிறேன். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறேன். அரசியல் கட்சியினர் மீது தொடர்ந்து நடைபெறும் வன்முறை சம்பவங்கள் வேதனையளிக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த செய்தி