ஆப்நகரம்

பாஜகவுக்கு ஆதரவா? ஜம்மு காஷ்மீரில் சட்டசபையை கலைத்த ஆளுநர் சத்யபால் மாலிக்!

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் மெகபூபா முப்தி ஆட்சியமைக்க உரிமை கோரிய நிலையில், ஆளுநர் சத்யபால் மாலிக் சட்டசபையை கலைத்து அதிரடி உத்தரவிட்டுள்ளார்.

Samayam Tamil 22 Nov 2018, 1:47 am
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் மெகபூபா முப்தி ஆட்சியமைக்க உரிமை கோரிய நிலையில், ஆளுநர் சத்யபால் மாலிக் சட்டசபையை கலைத்து அதிரடி உத்தரவிட்டுள்ளார்.
Samayam Tamil mehboo


ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கடந்த 2014ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் எந்த அரசியல் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. ஏனென்றால், மெகபூபா முப்தி தலைமையிலான மக்கள் ஜனநாயகக் கட்சி 28, பாஜக 25, தேசிய மாநாடு கட்சி 15, காங்கிரஸ் 12 ஆகிய இடங்களை கைப்பற்றின. மற்ற கட்சிகள் 7 தொகுதிகளில் வெற்றி பெற்றன. இந்த நிலையில், யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காததால், மெகபூபா முப்தியின் மக்கள் ஜனநாயகக் கட்சியும், பாஜகவும் இணைந்து கூட்டணி ஆட்சி அமைத்தன. இதையடுத்து, மக்கள் ஜனநாயகக் கட்சி சார்பில் மெகபூபா முப்தி முதல்வராக பொறுப்பேற்றார். பாஜக சார்பில், நிர்மல் குமார் சிங் துணை முதல்வராக பொறுப்பேற்றார்.

இந்த நிலையில், கடந்த ஜூன் மாதம் பாஜக தனது ஆதரவை திரும்ப பெற்றுக் கொண்டது. இதன் தொடர்ச்சியாக ஜம்மு காஷ்மீரில் ஆளுநர் ஆட்சி அமலுக்கு வந்தது. இதையடுத்து, பாஜக ஆட்சியமைக்க அடித்தளம் அமைக்க முயற்சித்தது. இதனை முறியடிக்கும் முயற்சியில் மக்கள் ஜனநாயகக் கட்சி, காங்கிரஸ், தேசிய மாநாடு கட்சிகள் இணைந்து கூட்டணி அரசை அமைக்க முன்வந்தது.

இதன் காரணமாக, ஜம்மு காஷ்மீரில் மீண்டும் ஆட்சியமைக்க மெகபூபா முப்தி உரிமை கோரி கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தை பேக்ஸ் மூலம் அனுப்ப மேற்கொண்ட முயற்சி தோல்வியடைந்ததாகவும், ஆளுநரை தொலைபேசி மூலமாக பேசி, சந்திக்க முயற்சித்ததாகவும் கூறி, டுவிட்டரில் கடிதம் வெளியிட்டுள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ஜம்மு காஷ்மீரில், ஆளுநர் பாஜகவிற்கு ஆதரவு கொடுக்கும் நோக்கத்தில் நடந்து வருகிறார். நாங்கள் ஆட்சியமைக்க உரிமை கோருகிறோம் என்று தெரிந்ததும் சட்டசபையை கலைத்து உத்தரவிட்டுள்ளார் என்று கூறியுள்ளார். இதற்கு முன்னதாக தேசிய மாநாடு கட்சி சட்டசபையை கலைக்க கோரிய போது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆனால், தற்போது காங்கிரஸ், மக்கள் ஜனநாயக் கட்சி, தேசிய மாநாடு கட்சி கூட்டணி என்றதும் சட்டபேரபை கலைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி