ஆப்நகரம்

மறுசீரமைப்புக்கு பின் முதல் சுதந்திர தின கொண்டாட்டம்; தேசியக் கொடி ஏற்றிய காஷ்மீர் ஆளுநர்!

ஜம்மு காஷ்மீரில் ஆளுநர் சத்ய பால் மாலிக் தேசியக் கொடியை ஏற்றி வைத்து, சுதந்திர தினக் கொண்டாட்டங்களை தொடங்கி வைத்தார்.

Samayam Tamil 15 Aug 2019, 2:15 pm
நாட்டின் 73வது சுதந்திர தினம் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி முக்கிய இடங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசியக் கொடியை ஏற்றி வைத்து, நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.
Samayam Tamil Satyapal Malik


இதேபோல் அனைத்து மாநில முதலமைச்சர்களும், மூவர்ணக் கொடியை ஏற்றி வைத்து சிறப்பித்தனர். ஜம்மு காஷ்மீரில் ஆளுநர் ஆட்சி நடைபெற்று வருவதால், அவர் இந்த ஆண்டு சுதந்திர தின விழாவிற்கு தலைமை தாங்கினார்.

Also Read: அரசு பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம்: கெஜ்ரிவால் அறிவிப்பு!

அதன்படி, ஸ்ரீநகரின் ஷெர் ஐ காஷ்மீர் மைதானத்தில் ஆளுநர் சத்யபால் மாலிக் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். இதையடுத்து துணை ராணுவம், போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.

Also Read: மக்கள் தொகை கட்டுப்பாடும் ஒரு வகையில் தேசப்பற்று தான்: பிரதமர் மோடி பேச்சு!!

பின்னர் பேசிய சத்யபால் மாலிக், ஜம்மு காஷ்மீரில் சிறப்பு சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டுள்ளது. இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இது காஷ்மீர் மற்றும் லடாக் மக்களுக்கு புதிய வாய்ப்புகளை திறந்து வைத்துள்ளது.

காஷ்மீர் மக்களின் அடையாளங்கள் பறிக்கப்படவில்லை. அழிக்கப்பட வில்லை. இதனை காஷ்மீர் மக்களுக்கு உறுதி அளிக்கிறேன் என்று கூறினார். இதேபோல் லடாக் பகுதியில் பொதுமக்கள் உற்சாகமாக சுதந்திர தினத்தைக் கொண்டாடினர்.

Also Read: சட்டப்பிரிவு 370ஐ ஏன் நீக்கவில்லை? காங்கிரசை விளாசிய பிரதமர் மோடி!!

அடுத்த செய்தி