ஆப்நகரம்

மீண்டும் ஊரடங்கு நீட்டிப்பு.. எகிறி அடிக்கும் கொரோனா!

கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில் ஊரடங்கை மார்ச் இறுதிவரை நீட்டிப்பதாக ஜம்மூ காஷ்மீர் அரசு அறிவித்துள்ளது.

Samayam Tamil 26 Feb 2021, 11:09 pm

ஹைலைட்ஸ்:

  • எகிறும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை
  • ஊரடங்கு மேலும் நீட்டிப்பு
  • ஜம்மூ காஷ்மீர் அரசு அறிவிப்பு
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil lockdown
இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் அண்மை நாட்களாக கொரோனா பாதிப்பு வேகமாக உயர்ந்து வருகிறது. குறிப்பாக, மகாராஷ்டிரம், கேரளம் உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை திடீரென உயர்ந்துகொண்டே வருகிறது.
இந்தியாவுக்குள் நுழைந்த ஏலியன்கள்? வெளியான அதிர்ச்சி வீடியோ!
இதேபோல, ஜம்மூ காஷ்மீரிலும் கொரோனா பாதிப்பு சில தினங்களாக உயர்ந்து வருகிறது. இந்நிலையில், ஜம்மூ காஷ்மீரின் கட்டுப்பாட்டு பகுதிகளில் மார்ச் 31ஆம் தேதி வரை மீண்டும் ஊரடங்கை நீட்டிப்பதாக ஜம்மூ காஷ்மீர் அரசு இன்று அறிவித்துள்ளது.

ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட கொரோனா பாதுகாப்பு நெறிமுறைகளுக்கான அவகாசத்தையும் மார்ச் 31ஆம் தேதி வரை நீட்டித்து ஜம்மூ காஷ்மீர் அரசு உத்தரவிட்டுள்ளது.

இன்று ஒரே நாளில் ஜம்மூ காஷ்மீரில் 85 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதனால் ஜம்மூ காஷ்மீரின் ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,26,286ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவுக்கு ஒருவர் பலியாகியுள்ளார்.

எல்லாருக்கும் சம்பள உயர்வு.. தேர்தலுக்கு முன் அதிரடி அறிவிப்பு!
ஜம்மூ காஷ்மீரில் இதுவரை கொரோனாவால் ஒட்டுமொத்தமாக 1,956 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று பதிவான 85 கொரோனா நோயாளிகளில் 16 பேர் ஜம்மூ சேர்ந்தவர்களாகவும், 69 பேர் காஷ்மீரை சேர்ந்தவர்களாகவும் இருக்கின்றனர்.

அடுத்த செய்தி